Friday, September 5, 2008

ரம்பை மேனகை ஊர்வசி

ரம்பை , மேனகை , ஊர்வசி

மும்பையின் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் " சொர்க்கம் மது விடுதி " மதுவுடன் பெண்களின் நடனமும் உண்டு என்பதால் , எப்போதும் அரங்கு நிறைந்தே காணப்படும். அதுவும் விடுமுறை நாட்களுக்கு முந்தைய தினம் என்றால் கேட்கவே வேண்டாம். அதனால் நான் விடுமுறை நாட்களில் செல்வதில்லை. புதுப் பாடகர்கள் மற்றும் பெண்கள் வந்தவுடன் எனக்கு எப்படியாவது தகவல் வந்து விடும். வழக்கம் போல இன்றும் தகவல் வந்தது.

பாதி இருளிலும், பாதி வெளிச்சத்திலும் இருந்த அந்த விடுதியில் எனக்கான இடத்தில் யாருமில்லை . யார் இருந்தாலும் அவர்கள் போகும் வரை நான் காத்திருந்து அமர்வதால் , எனக்கான இடம் ( விடுதி பணியாளர்களின் உதவியால் ) நிறைய நேரங்களில் காலியாகவே இருக்கும். நான் அப்போதுதான் கவனித்தேன் இரண்டாவது இருந்த அந்த பெண் மட்டும் குனிந்த படி யோசனையில் இருப்பதை. அடுத்த பாட்டுக்கு இரண்டு பெண்களுடன் ஆடிய அவள் மீண்டும் ஏதோ யோசனையுடன் குனிந்தபடி இருந்தாள்.

அடுத்தடுத்து பாடல்களுக்கு ஆடிய அவளுக்கு ஆறேழு தாள்களை அளித்தேன் . இப்போது என்னை பார்த்து எளிய தாய் ஒரு புன்னகை . விடுதி மேலாளரிடம் என்னுடைய கை பேசி என்னை எழுதி கொடுத்து அவளிடம் கொடுக்க சொன்னேன். அவளுடைய என்னை மேலாளரே என்னிடம் கொடுத்து விட்டார். காலை ஆறு மணிக்கு போன் செய்யுமாறு அவளிடம் செய்கையில் சொன்னேன்.

சிறிது நேரத்தில் விடுதியை விட்டு வெளியே வந்தவன் அறைக்கு சென்று உடனே தூங்கி விட்டேன். திடீரென விழித்து மணி பார்த்தேன் எட்டு . அந்த பெண்ணின் நினைவுடன் கை பேசி எடுத்து அவளின் அழைப்பு இருக்கிறதா என தேடினேன் . ஒன்றுமில்லை. சிறிது நேரம் யோசித்தவன் நானே அவளுடைய கைபேசியில் அழைத்தேன்.

வெகு நேரம் கழித்து எடுத்தவள் ,யாரென தெரியாததால் சிறிது பதட்டமாகவே இருந்தாள் . என்னை அறிமுகம் செய்தவுடன் இயல்பாய் பேசி , தன்னையும் அறிமுக படுத்தி பேச தொடங்கினால்.

ஏன் காலையில் பேசவில்லை என்றேன் ? என்னோடு பேசுபவர்கள் சிறிதும் யோசிக்காமல் தப்பு தப்பாக பேசுகிறார்கள். அதானால் நான் யாரோடும் பேசுவதில்லை ஏன்? என்னாயிற்று என்றேன் ? நான் மது விடுதியில் நடனம் ஆடுகிறேன். என்பதால் தப்பான பெண்ணில்லை . என்னுடை பணக் கஷ்டத்திற்காக வந்திருக்கிறேன் . இந்த ஆண்களே மோசம் . அலைகிறார்கள் என்றவள் , திடீரென நினவு வந்தவளாக , நான் உங்களை சொல்ல வில்லை என்றவள் மேலும் தொடர்ந்தாள் .

என்னை பார்த்த சில வினாடிகளில் அவர்களுக்கு எப்படித்தான் என்னை பிடிக்கிறதோ ? நீ தான் அழகி என்கிறார்கள் . என்னவெல்லாமோ பேசுகிறார்கள். தேவைப்பட்டால் தப்பான பெண்கள் தான் இருக்கிறார்களே அங்கு போக வேண்டியதுதானே இங்கே ஏன் வருகிறார்கள் என்றவள் எனக்கு பிடிக்க வில்லை , நான் இன்னும் சில நாட்களில் திரும்பி விடுவேன் என்றால் கோபம் மாறாமல்.

இப்போது நான் பேசலாமா என்று கேட்டேன் ? நீ இந்த விடுதிக்கு மட்டுமல்ல , நடனம் ஆடவே புதுசா வந்திருக்கிறே என்று நினைக்கிறேன் சரிதானா? ஆமாம் என்றவள் அதற்கும் நான் பேசியதற்கும் என்ன சம்பந்தம் என்றால்.

இங்கே வருபவர்கள் எல்லாம் ஊரை விட்டு வேலைக்காக வந்தவர்கள் . நிறைய நேரங்களில் தனிமையில் இருப்பவர்கள் . ஊரைப்பற்றிய , உறவைப்பற்றிய நினைவுகளுடன் மட்டும் வாழ்பவர்கள் .


அவர்களோடு பேசவோ அவர்களை கவனிக்கவோ ஆட்கள் இல்லாதவர்கள்.
சாப்பிட்டாச்சா என்று கூட கேட்க ஆள் இல்லாதவர்கள். அவர்களுக்கு பேச ஆட்கள் தேவை. அதனால் தான் உன்னிடம் பேசுகிறார்கள்.

நீ சொன்னது போல தப்பான பெண்ணை தேடி போக ரொம்ப நேரம் ஆகாது. இன்னும் சொல்லப் போனால் இந்த விடுதியில் செலவழிக்கிற தொகையில் அதுவும் உனக்காக செலவழிக்கிற தொகையில் பத்தில் ஒரு பங்கு செலவழித்தாலே உன்னை விட அழகான பெண்கள் கிடைப்பார்கள். ஆனால் அந்த பெண்கள் , அவனிடம் அவனது பெயரை கூட கேட்க மாட்டார்கள் . இப்போது புரிகிறதா என்றேன்? அவளிடம் அமைதியே பதிலாக இருந்தது.

இந்த விடுதியில் இருக்கிற ஆறேழு பெண்களில் நீ தான் அழகியா என்றேன்? இல்லை என்னை விட அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்றாள் . உன்னை ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா என்றேன் ? இல்லை என்றாள்.
கல்யாணத்துக்கு பெண் தேடும் பொது எப்படி அம்மா போல பெண் வேண்டும் , தனது சகோதரி போல பெண் வேண்டும் , இல்லை தனக்கு தெரிந்த பெண்களைப்போல பெண் வேண்டும் என நினைப்பவன் , இங்கேயும் அது போல தேடுகிறான். அவனது முன்னாள் காதலியை போல கூட நீ இருக்கலாம் .


அவன் மனதுக்கு பிடித்த யாரோ ஒரு பெண்ணை போல நீ இருக்கிறாய். உன்னை பிடித்து இருக்கிறது என்பவனிடம் கேள். இது போல் பதில் தான் கட்டாயம் வரும். அவளிடம் இப்போதும் அமைதியே பதில்.
யாராவது அன்போடு பேசுவார்களா என்று தான் உன்னை தேடி வருகிறார்கள்.

நீ நினைப்பது போல இங்கே விற்பனையாவது மதுவோ உன்னுடைய கவர்ச்சி நடனமோ இல்லை. இங்கே விற்பனை ஆவதும் , வாங்கப்படுவதும் அன்பு தான் . அவளிடம் இருந்து இப்போது பேச்சே இல்லை.

பணத்திற்காக வந்தவள் நீ , திரும்பி போவதினால் உன்னுடைய கஷ்டம் தீராது. திரும்பி போகமாட்டேன் என்பதுதான் உன் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன் . எதற்கும் நான் சாயங்காலம் பேசுகிறேன் என்று கூறி கைபேசியை வைத்து விட்டேன்.

மீண்டும் படுத்தேன் ஆனால் இம்முறை உறக்கம் வரவில்லை. அவளின் நினைவாகவே இருந்தது. மறுமுறை அவளை அழைக்கலாமா என்று கூட தோணியது. ஆனால் அழைக்கவில்லை.
எதோ மனதை அழுத்தியது.
==============================================================
சாயங்காலம் ஆறு மணிக்கு கை பேசி அழைத்தது. அவளாக இருக்கும் என்றும் நினைத்து எடுத்து பார்த்தேன் . ஆனால் அழைத்தது முதலாளி. அந்த பொண்ணு வந்துச்சு தம்பி. மூணு மாசம் இருந்து ஆடிட்டு போறேன்னு சொல்லிடுச்சு என்றார். நான் எதோ கேட்க ஆரம்பிக்கு முன் அவரே தொடர்ந்தார் .
தம்பி ! நான் ஒரு வியாபாரி. ஆனா எந்த பொன்னையும் நான் தேடி போனதில்லை , அவங்களா வந்து நான் ஆடறேன்னு சொல்றாங்க. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை முன் பணமா கொடுத்து ,
நான் கூட்டிட்டு வர்றேன் . இருந்தும் இங்க வந்த வுடனே அவர்களுக்கு மனசு மாறுது, எனக்கு புடிக்கலை நான் போறேன்னு சொல்லும் பொது சில நேரம் கோவம் வரும் ,

திருப்பி அனுப்பினா கை நட்டம் . கை நட்டத்தை விட உனக்கு கொடுக்கிறே பணம் ரொம்ப குறைவு தான் , அதனால தான் உன்னை தேடி வர வேண்டியதாருக்கு என்றார். இப்போ எவ்வளவு பணம் வேணும் என்றவரை , இடை மறித்து இல்லை முதலாளி பணம் வேண்டாம் என்றேன். திடுக்கிட்ட முதலாளி ஏன் என்ன ஆச்சு ? என்றார்.

ஒவ்வொரு முறை நான் பெண்களோடு பேசும் போதும் , சில வினாடிகளில் அவங்க நிலை தெரிஞ்சுடும் . அந்த பெண்கள் எல்லாம் மது விடுதியை பத்தி தெரிஞ்சவங்க . விதம் விதமான மன நிலைகளோட வர்ற ஆம்பளைகளை சமாளிக்க முடியாம திணறி நிப்பாங்க . அவர்களை சமாளிப்பது எப்படின்னு சில நேரம் பேசுவேன். அவ்வளவு தான்.

இன்னும் சொல்லப் போனா ஆம்பளைகளை எப்படி ஏமாற்றுவது , என்று கூட சொல்லி கொடுத்து இருக்கிறேன். ஆனா இந்த முறை வந்த நடனம் ஆட வந்த பெண்ணையே ஏமாற்றியது எனக்கு கஷ்டமா இருந்தது . இந்த பெண் மது விடுதியை பத்தி தெரியாதவள். எதோ பணக் கஷ்டத்தில் வந்து விட்டால், மாற்ற படி இந்த தொழிலை பற்றி அறியாதவள் . அவளை திருப்பி அனுப்பிடலாம் முதலாளி என்றேன்.


நீங்கள் சொன்னது போல இந்த தொழிலை பற்றி தெரிந்து , நம்மை தேடி வந்தவர்களை ஆட வைப்போம். நாமாக யாரையும் இந்த தொழிலில் இழுக்க வேண்டாம் என்று கூறி கை பேசியை வைத்து விட்டேன் .
அழுத்திய சுமை இப்போது விலகியது.
=============================================================