Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, September 5, 2008

ரம்பை மேனகை ஊர்வசி

ரம்பை , மேனகை , ஊர்வசி

மும்பையின் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் " சொர்க்கம் மது விடுதி " மதுவுடன் பெண்களின் நடனமும் உண்டு என்பதால் , எப்போதும் அரங்கு நிறைந்தே காணப்படும். அதுவும் விடுமுறை நாட்களுக்கு முந்தைய தினம் என்றால் கேட்கவே வேண்டாம். அதனால் நான் விடுமுறை நாட்களில் செல்வதில்லை. புதுப் பாடகர்கள் மற்றும் பெண்கள் வந்தவுடன் எனக்கு எப்படியாவது தகவல் வந்து விடும். வழக்கம் போல இன்றும் தகவல் வந்தது.

பாதி இருளிலும், பாதி வெளிச்சத்திலும் இருந்த அந்த விடுதியில் எனக்கான இடத்தில் யாருமில்லை . யார் இருந்தாலும் அவர்கள் போகும் வரை நான் காத்திருந்து அமர்வதால் , எனக்கான இடம் ( விடுதி பணியாளர்களின் உதவியால் ) நிறைய நேரங்களில் காலியாகவே இருக்கும். நான் அப்போதுதான் கவனித்தேன் இரண்டாவது இருந்த அந்த பெண் மட்டும் குனிந்த படி யோசனையில் இருப்பதை. அடுத்த பாட்டுக்கு இரண்டு பெண்களுடன் ஆடிய அவள் மீண்டும் ஏதோ யோசனையுடன் குனிந்தபடி இருந்தாள்.

அடுத்தடுத்து பாடல்களுக்கு ஆடிய அவளுக்கு ஆறேழு தாள்களை அளித்தேன் . இப்போது என்னை பார்த்து எளிய தாய் ஒரு புன்னகை . விடுதி மேலாளரிடம் என்னுடைய கை பேசி என்னை எழுதி கொடுத்து அவளிடம் கொடுக்க சொன்னேன். அவளுடைய என்னை மேலாளரே என்னிடம் கொடுத்து விட்டார். காலை ஆறு மணிக்கு போன் செய்யுமாறு அவளிடம் செய்கையில் சொன்னேன்.

சிறிது நேரத்தில் விடுதியை விட்டு வெளியே வந்தவன் அறைக்கு சென்று உடனே தூங்கி விட்டேன். திடீரென விழித்து மணி பார்த்தேன் எட்டு . அந்த பெண்ணின் நினைவுடன் கை பேசி எடுத்து அவளின் அழைப்பு இருக்கிறதா என தேடினேன் . ஒன்றுமில்லை. சிறிது நேரம் யோசித்தவன் நானே அவளுடைய கைபேசியில் அழைத்தேன்.

வெகு நேரம் கழித்து எடுத்தவள் ,யாரென தெரியாததால் சிறிது பதட்டமாகவே இருந்தாள் . என்னை அறிமுகம் செய்தவுடன் இயல்பாய் பேசி , தன்னையும் அறிமுக படுத்தி பேச தொடங்கினால்.

ஏன் காலையில் பேசவில்லை என்றேன் ? என்னோடு பேசுபவர்கள் சிறிதும் யோசிக்காமல் தப்பு தப்பாக பேசுகிறார்கள். அதானால் நான் யாரோடும் பேசுவதில்லை ஏன்? என்னாயிற்று என்றேன் ? நான் மது விடுதியில் நடனம் ஆடுகிறேன். என்பதால் தப்பான பெண்ணில்லை . என்னுடை பணக் கஷ்டத்திற்காக வந்திருக்கிறேன் . இந்த ஆண்களே மோசம் . அலைகிறார்கள் என்றவள் , திடீரென நினவு வந்தவளாக , நான் உங்களை சொல்ல வில்லை என்றவள் மேலும் தொடர்ந்தாள் .

என்னை பார்த்த சில வினாடிகளில் அவர்களுக்கு எப்படித்தான் என்னை பிடிக்கிறதோ ? நீ தான் அழகி என்கிறார்கள் . என்னவெல்லாமோ பேசுகிறார்கள். தேவைப்பட்டால் தப்பான பெண்கள் தான் இருக்கிறார்களே அங்கு போக வேண்டியதுதானே இங்கே ஏன் வருகிறார்கள் என்றவள் எனக்கு பிடிக்க வில்லை , நான் இன்னும் சில நாட்களில் திரும்பி விடுவேன் என்றால் கோபம் மாறாமல்.

இப்போது நான் பேசலாமா என்று கேட்டேன் ? நீ இந்த விடுதிக்கு மட்டுமல்ல , நடனம் ஆடவே புதுசா வந்திருக்கிறே என்று நினைக்கிறேன் சரிதானா? ஆமாம் என்றவள் அதற்கும் நான் பேசியதற்கும் என்ன சம்பந்தம் என்றால்.

இங்கே வருபவர்கள் எல்லாம் ஊரை விட்டு வேலைக்காக வந்தவர்கள் . நிறைய நேரங்களில் தனிமையில் இருப்பவர்கள் . ஊரைப்பற்றிய , உறவைப்பற்றிய நினைவுகளுடன் மட்டும் வாழ்பவர்கள் .


அவர்களோடு பேசவோ அவர்களை கவனிக்கவோ ஆட்கள் இல்லாதவர்கள்.
சாப்பிட்டாச்சா என்று கூட கேட்க ஆள் இல்லாதவர்கள். அவர்களுக்கு பேச ஆட்கள் தேவை. அதனால் தான் உன்னிடம் பேசுகிறார்கள்.

நீ சொன்னது போல தப்பான பெண்ணை தேடி போக ரொம்ப நேரம் ஆகாது. இன்னும் சொல்லப் போனால் இந்த விடுதியில் செலவழிக்கிற தொகையில் அதுவும் உனக்காக செலவழிக்கிற தொகையில் பத்தில் ஒரு பங்கு செலவழித்தாலே உன்னை விட அழகான பெண்கள் கிடைப்பார்கள். ஆனால் அந்த பெண்கள் , அவனிடம் அவனது பெயரை கூட கேட்க மாட்டார்கள் . இப்போது புரிகிறதா என்றேன்? அவளிடம் அமைதியே பதிலாக இருந்தது.

இந்த விடுதியில் இருக்கிற ஆறேழு பெண்களில் நீ தான் அழகியா என்றேன்? இல்லை என்னை விட அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்றாள் . உன்னை ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா என்றேன் ? இல்லை என்றாள்.
கல்யாணத்துக்கு பெண் தேடும் பொது எப்படி அம்மா போல பெண் வேண்டும் , தனது சகோதரி போல பெண் வேண்டும் , இல்லை தனக்கு தெரிந்த பெண்களைப்போல பெண் வேண்டும் என நினைப்பவன் , இங்கேயும் அது போல தேடுகிறான். அவனது முன்னாள் காதலியை போல கூட நீ இருக்கலாம் .


அவன் மனதுக்கு பிடித்த யாரோ ஒரு பெண்ணை போல நீ இருக்கிறாய். உன்னை பிடித்து இருக்கிறது என்பவனிடம் கேள். இது போல் பதில் தான் கட்டாயம் வரும். அவளிடம் இப்போதும் அமைதியே பதில்.
யாராவது அன்போடு பேசுவார்களா என்று தான் உன்னை தேடி வருகிறார்கள்.

நீ நினைப்பது போல இங்கே விற்பனையாவது மதுவோ உன்னுடைய கவர்ச்சி நடனமோ இல்லை. இங்கே விற்பனை ஆவதும் , வாங்கப்படுவதும் அன்பு தான் . அவளிடம் இருந்து இப்போது பேச்சே இல்லை.

பணத்திற்காக வந்தவள் நீ , திரும்பி போவதினால் உன்னுடைய கஷ்டம் தீராது. திரும்பி போகமாட்டேன் என்பதுதான் உன் பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன் . எதற்கும் நான் சாயங்காலம் பேசுகிறேன் என்று கூறி கைபேசியை வைத்து விட்டேன்.

மீண்டும் படுத்தேன் ஆனால் இம்முறை உறக்கம் வரவில்லை. அவளின் நினைவாகவே இருந்தது. மறுமுறை அவளை அழைக்கலாமா என்று கூட தோணியது. ஆனால் அழைக்கவில்லை.
எதோ மனதை அழுத்தியது.
==============================================================
சாயங்காலம் ஆறு மணிக்கு கை பேசி அழைத்தது. அவளாக இருக்கும் என்றும் நினைத்து எடுத்து பார்த்தேன் . ஆனால் அழைத்தது முதலாளி. அந்த பொண்ணு வந்துச்சு தம்பி. மூணு மாசம் இருந்து ஆடிட்டு போறேன்னு சொல்லிடுச்சு என்றார். நான் எதோ கேட்க ஆரம்பிக்கு முன் அவரே தொடர்ந்தார் .
தம்பி ! நான் ஒரு வியாபாரி. ஆனா எந்த பொன்னையும் நான் தேடி போனதில்லை , அவங்களா வந்து நான் ஆடறேன்னு சொல்றாங்க. அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை முன் பணமா கொடுத்து ,
நான் கூட்டிட்டு வர்றேன் . இருந்தும் இங்க வந்த வுடனே அவர்களுக்கு மனசு மாறுது, எனக்கு புடிக்கலை நான் போறேன்னு சொல்லும் பொது சில நேரம் கோவம் வரும் ,

திருப்பி அனுப்பினா கை நட்டம் . கை நட்டத்தை விட உனக்கு கொடுக்கிறே பணம் ரொம்ப குறைவு தான் , அதனால தான் உன்னை தேடி வர வேண்டியதாருக்கு என்றார். இப்போ எவ்வளவு பணம் வேணும் என்றவரை , இடை மறித்து இல்லை முதலாளி பணம் வேண்டாம் என்றேன். திடுக்கிட்ட முதலாளி ஏன் என்ன ஆச்சு ? என்றார்.

ஒவ்வொரு முறை நான் பெண்களோடு பேசும் போதும் , சில வினாடிகளில் அவங்க நிலை தெரிஞ்சுடும் . அந்த பெண்கள் எல்லாம் மது விடுதியை பத்தி தெரிஞ்சவங்க . விதம் விதமான மன நிலைகளோட வர்ற ஆம்பளைகளை சமாளிக்க முடியாம திணறி நிப்பாங்க . அவர்களை சமாளிப்பது எப்படின்னு சில நேரம் பேசுவேன். அவ்வளவு தான்.

இன்னும் சொல்லப் போனா ஆம்பளைகளை எப்படி ஏமாற்றுவது , என்று கூட சொல்லி கொடுத்து இருக்கிறேன். ஆனா இந்த முறை வந்த நடனம் ஆட வந்த பெண்ணையே ஏமாற்றியது எனக்கு கஷ்டமா இருந்தது . இந்த பெண் மது விடுதியை பத்தி தெரியாதவள். எதோ பணக் கஷ்டத்தில் வந்து விட்டால், மாற்ற படி இந்த தொழிலை பற்றி அறியாதவள் . அவளை திருப்பி அனுப்பிடலாம் முதலாளி என்றேன்.


நீங்கள் சொன்னது போல இந்த தொழிலை பற்றி தெரிந்து , நம்மை தேடி வந்தவர்களை ஆட வைப்போம். நாமாக யாரையும் இந்த தொழிலில் இழுக்க வேண்டாம் என்று கூறி கை பேசியை வைத்து விட்டேன் .
அழுத்திய சுமை இப்போது விலகியது.
=============================================================

Thursday, May 1, 2008

கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்

கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்

வ வா சங்கத்து போட்டிக்கான எனது ரெண்டாவது பதிவு

இந்த வாரம் ஊருக்கு வரணும்னு போன் வரும்போதே நினைச்சேன் இந்த தடவையும் பொண்ணு பார்க்க வரப்போராங்கன்னு .

நான் நினைச்சதும் சரியா தான் இருந்தது , சாந்தி அக்கா தான் வாசல்லையே நின்னுச்சே. தெரு முக்குலே திரும்பும் போதே , என்னைய பார்த்துட்ட அக்கா , பாதி தூரம் வந்துருச்சு. ரயில் இப்பத்தான் வந்ததா கேட்டுக்கிட்டே என் பெட்டியை கையில வாங்கிட்டு வீட்டுக்கு உள்ள போயிருச்சு . என்னோட அறைக்கு போயி நான் நைட்டியை தேடி எடுத்து மாத்தறதுக்குள்ளே காப்பியை கொண்டு வந்து கொடுத்துருச்சு . அதான் சாந்தி அக்கா.

வீட்டுல என்ன விசெஷம்னாலும் சாந்தி அக்கா இல்லைன்னா , அம்மாவுக்கு வேலையே ஓடாது. அக்கா கொஞ்சம் அம்மா வழி தூரத்து சொந்தம் . பக்கத்து தெருவுல இருந்தாலும் , அங்கன சோத்தபொங்கி வச்சுட்டு இங்க வந்துரும் . எங்க வீட்டுலயா இருக்கறதுனால அக்கா , அம்மாவுக்கு முக்கியமான ஆளு.

நான் குளிச்சுட்டு வர்றேக்கான்னு சொல்லும் போதே , சிரிச்சுக்கிட்டே
நாளைக்கு தான் பொண்ணு பார்க்க வாரங்கன்னு , சொல்லிட்டு உள்ள போயிருச்சு. அம்மாவும் , நாளைக்குத்தான் வர்றாங்க , நீ சீக்கிரம் குளிச்சுட்டு வா , திருச்செந்தூர் கோவிலுக்கு போவோம்னு சொல்லிக்கிட்டே உள்ள போய்ட்டாங்க .

பஸ்ல கூட்டம் அதிகம் இல்லை. எனக்கும் அம்மாவுக்கும் நாலாவது சீட்டுல தான் இடம் கிடைச்சுது. பஸ் கிளம்பின உடனேயே , அம்மாவுக்கு எதோ சிந்தனை , திரும்பி பார்த்தேன். என்னம்ம்மா திடீரென கொவிளுக்குன்னு கேட்டேன் , இந்த வரனாவது நல்ல படி அமையனும்னு தான் , நீவேனா தூக்கம் வந்தா தூங்குன்னு சொன்ன அம்மா முகத்திலே கவலைக்கொடுகள் .


ராத்திரி நல்ல தூக்கம் இல்லாததுனாலே , எனக்கும் அலுப்பா தான் இருந்தது. பஸ்ல நானும் நல்லா தூங்கிட்டேன். திடீரென முழிச்சு பார்த்தேன் , பஸ் நின்னுக்கிட்டு இருந்தது. என்னைய திரும்பி பார்த்த அம்மா , "அம்மன் புறம் ரயில்வே கேட்டு " ன்னு சொன்னாங்க.

கேட்டு கதவுல எதோ பிரச்சனையாம், பூட்டு திறக்க முடியலையாம் பக்கத்து சீட்டு பொம்பளை யார் கிட்டயோ சொல்லிக்கிட்டு இருந்தது. பஸ்சுக்கு உள்ளார பார்த்தா, உள்ள பாதி கூட்டம் தான் இருந்தது. மீதி கூட்டம் கீழ தான் இருந்தது.

நானும் இறங்கிட்டேன். அந்த பக்கம் இந்த பக்கம் கடையே இல்லை.
கொஞ்சம் தள்ளி ஒரு இளனி கடை , அதுக்கு பக்கத்துல ஒரு பொம்பளை கீழ உட்கார்ந்து ஓலை விசிறி செஞ்சுகிட்டு இருந்தது. பக்கத்துலேயே ஒரு தொட்டில்ல குழந்தை.

குழந்தையையும் குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு , ஆள் இல்லாத நேரம் இளனி கடையை பார்த்துக்கிறதே ரொம்ப கஷ்டம் , இதுல விசிறி விற்பனை வேறயா ? , கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக கூடாதுன்கிற எண்ணம் இருந்த எனக்கு இது ரொம்ப வித்தியாசமா இருந்தது. என்னால முடியலை , பக்கத்துல போயி அந்த பொண்ணு கிட்டே கேட்டுட்டேன்.

அவள் சொன்னது இது தான் " இந்த விசிறி செய்யறது எங்க மாமியார் தான் சொல்லி கொடுத்தது. ஒரு விசிறி செஞ்சா முக்கா ரூபா கிடைக்கும். அவ்வளவுதான். ரெண்டு மாசம் மத்த வேலையோட விசிறியும் செய்யறது கொஞ்சம் கஷ்டம் தான் , ஆனா "நான் சொந்த காலுல நிக்கறதே வருஷத்துல இந்த ரெண்டு மாசம் தான் " அதனால தான் கல்யாணத்துல இருந்தே இதை விடாம செஞ்சுக்கிட்டு இருக்கேன் "


எனக்கு அதுக்கு மேல என்ன பேசறதுன்னே தெரியலை. நான் திரும்பி வந்துட்டேன்.

நான் கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு போவேன்னு , நாளைக்கு வர்றவங்க கிட்டே சொல்லிரும்மா, என்ற என்னை பார்த்த அம்மா முகத்தில் இம்முறை கவலைக் கோலங்கள் .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
கே ஆர் பி

=============================================================
மலையாள தனியார் தொலைக் காட்சி செய்திகள் ஓலை பின்னும் பெண்களை இரண்டு நிமிடம் காட்டினார்கள். அடுத்த இருபத்து நிமிடத்தில் விளைந்த கற்பனை .

கதை வெறும் மூன்று மணி நேரம் என்பதால் ஆண் கதா பாத்திரங்கள் தேவைப் படவில்லை . (மூன்று பேருக்குமே கணவர்கள் இருந்தாலும் அவர்களைப் பற்றி சொல்லப் படவில்லை ) .

அனைத்துமே பெண் பாத்திரங்களாக அமைந்தன . (மாப்பிள்ளை வீட்டுக் காரர்கள் வருகிறார்கள் என்று கூட சொல்லாமல், பெண் பார்க்க வருகிறார்கள் என்றே எழுதினேன் )

எந்த பெண்ணைப் பற்றிய கதை என்றே தெரியக் கூடாது என்பதற்காக , அனைவரையுமே சரி சமமாக எழுத முயற்சித்தேன்.

மாமியாரும் மருமகளும் எப்படிப்பட்ட வராக இருந்தாலும் , பெண் விடுதலை , பெண் பற்றிய சிந்தனைகளில் அவர்கள் ஒரே எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது என் எண்ணம் .

=============================================================