வ வா சங்கத்து போட்டிக்கான எனது ரெண்டாவது பதிவு
இந்த வாரம் ஊருக்கு வரணும்னு போன் வரும்போதே நினைச்சேன் இந்த தடவையும் பொண்ணு பார்க்க வரப்போராங்கன்னு .
நான் நினைச்சதும் சரியா தான் இருந்தது , சாந்தி அக்கா தான் வாசல்லையே நின்னுச்சே. தெரு முக்குலே திரும்பும் போதே , என்னைய பார்த்துட்ட அக்கா , பாதி தூரம் வந்துருச்சு. ரயில் இப்பத்தான் வந்ததா கேட்டுக்கிட்டே என் பெட்டியை கையில வாங்கிட்டு வீட்டுக்கு உள்ள போயிருச்சு . என்னோட அறைக்கு போயி நான் நைட்டியை தேடி எடுத்து மாத்தறதுக்குள்ளே காப்பியை கொண்டு வந்து கொடுத்துருச்சு . அதான் சாந்தி அக்கா.
வீட்டுல என்ன விசெஷம்னாலும் சாந்தி அக்கா இல்லைன்னா , அம்மாவுக்கு வேலையே ஓடாது. அக்கா கொஞ்சம் அம்மா வழி தூரத்து சொந்தம் . பக்கத்து தெருவுல இருந்தாலும் , அங்கன சோத்தபொங்கி வச்சுட்டு இங்க வந்துரும் . எங்க வீட்டுலயா இருக்கறதுனால அக்கா , அம்மாவுக்கு முக்கியமான ஆளு.
நான் குளிச்சுட்டு வர்றேக்கான்னு சொல்லும் போதே , சிரிச்சுக்கிட்டே
நாளைக்கு தான் பொண்ணு பார்க்க வாரங்கன்னு , சொல்லிட்டு உள்ள போயிருச்சு. அம்மாவும் , நாளைக்குத்தான் வர்றாங்க , நீ சீக்கிரம் குளிச்சுட்டு வா , திருச்செந்தூர் கோவிலுக்கு போவோம்னு சொல்லிக்கிட்டே உள்ள போய்ட்டாங்க .
பஸ்ல கூட்டம் அதிகம் இல்லை. எனக்கும் அம்மாவுக்கும் நாலாவது சீட்டுல தான் இடம் கிடைச்சுது. பஸ் கிளம்பின உடனேயே , அம்மாவுக்கு எதோ சிந்தனை , திரும்பி பார்த்தேன். என்னம்ம்மா திடீரென கொவிளுக்குன்னு கேட்டேன் , இந்த வரனாவது நல்ல படி அமையனும்னு தான் , நீவேனா தூக்கம் வந்தா தூங்குன்னு சொன்ன அம்மா முகத்திலே கவலைக்கொடுகள் .
ராத்திரி நல்ல தூக்கம் இல்லாததுனாலே , எனக்கும் அலுப்பா தான் இருந்தது. பஸ்ல நானும் நல்லா தூங்கிட்டேன். திடீரென முழிச்சு பார்த்தேன் , பஸ் நின்னுக்கிட்டு இருந்தது. என்னைய திரும்பி பார்த்த அம்மா , "அம்மன் புறம் ரயில்வே கேட்டு " ன்னு சொன்னாங்க.
கேட்டு கதவுல எதோ பிரச்சனையாம், பூட்டு திறக்க முடியலையாம் பக்கத்து சீட்டு பொம்பளை யார் கிட்டயோ சொல்லிக்கிட்டு இருந்தது. பஸ்சுக்கு உள்ளார பார்த்தா, உள்ள பாதி கூட்டம் தான் இருந்தது. மீதி கூட்டம் கீழ தான் இருந்தது.
நானும் இறங்கிட்டேன். அந்த பக்கம் இந்த பக்கம் கடையே இல்லை.
கொஞ்சம் தள்ளி ஒரு இளனி கடை , அதுக்கு பக்கத்துல ஒரு பொம்பளை கீழ உட்கார்ந்து ஓலை விசிறி செஞ்சுகிட்டு இருந்தது. பக்கத்துலேயே ஒரு தொட்டில்ல குழந்தை.
குழந்தையையும் குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு , ஆள் இல்லாத நேரம் இளனி கடையை பார்த்துக்கிறதே ரொம்ப கஷ்டம் , இதுல விசிறி விற்பனை வேறயா ? , கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக கூடாதுன்கிற எண்ணம் இருந்த எனக்கு இது ரொம்ப வித்தியாசமா இருந்தது. என்னால முடியலை , பக்கத்துல போயி அந்த பொண்ணு கிட்டே கேட்டுட்டேன்.
அவள் சொன்னது இது தான் " இந்த விசிறி செய்யறது எங்க மாமியார் தான் சொல்லி கொடுத்தது. ஒரு விசிறி செஞ்சா முக்கா ரூபா கிடைக்கும். அவ்வளவுதான். ரெண்டு மாசம் மத்த வேலையோட விசிறியும் செய்யறது கொஞ்சம் கஷ்டம் தான் , ஆனா "நான் சொந்த காலுல நிக்கறதே வருஷத்துல இந்த ரெண்டு மாசம் தான் " அதனால தான் கல்யாணத்துல இருந்தே இதை விடாம செஞ்சுக்கிட்டு இருக்கேன் "
எனக்கு அதுக்கு மேல என்ன பேசறதுன்னே தெரியலை. நான் திரும்பி வந்துட்டேன்.
நான் கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு போவேன்னு , நாளைக்கு வர்றவங்க கிட்டே சொல்லிரும்மா, என்ற என்னை பார்த்த அம்மா முகத்தில் இம்முறை கவலைக் கோலங்கள் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
கே ஆர் பி
=============================================================
மலையாள தனியார் தொலைக் காட்சி செய்திகள் ஓலை பின்னும் பெண்களை இரண்டு நிமிடம் காட்டினார்கள். அடுத்த இருபத்து நிமிடத்தில் விளைந்த கற்பனை .
கதை வெறும் மூன்று மணி நேரம் என்பதால் ஆண் கதா பாத்திரங்கள் தேவைப் படவில்லை . (மூன்று பேருக்குமே கணவர்கள் இருந்தாலும் அவர்களைப் பற்றி சொல்லப் படவில்லை ) .
அனைத்துமே பெண் பாத்திரங்களாக அமைந்தன . (மாப்பிள்ளை வீட்டுக் காரர்கள் வருகிறார்கள் என்று கூட சொல்லாமல், பெண் பார்க்க வருகிறார்கள் என்றே எழுதினேன் )
எந்த பெண்ணைப் பற்றிய கதை என்றே தெரியக் கூடாது என்பதற்காக , அனைவரையுமே சரி சமமாக எழுத முயற்சித்தேன்.
மாமியாரும் மருமகளும் எப்படிப்பட்ட வராக இருந்தாலும் , பெண் விடுதலை , பெண் பற்றிய சிந்தனைகளில் அவர்கள் ஒரே எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது என் எண்ணம் .
=============================================================
12 comments:
தன்னம்பிக்கையூட்டும் கதை, நல்லா இருக்குங்க.
நன்றி இளா
வ வா சங்கத்து போட்டிக்காக இந்த பதிவு
அன்புடன்
கே ஆர் பி
நல்லா வந்திருக்கு கதை
முத்துகுமார்
Good Effort!
Thanks Anony
Anbudan
KRP
Very nice short story,
Inspiring & thought provoking!!
THANKS DIVYA
ANBUDAN
KRP
கதை நல்லாயிருக்கு. மீதி பத்து மாசம் அவங்க எப்படி வாழ்க்கை ஓட்டுவாங்கன்னு தெரிய ஆவலா இருக்கு.
<==
நான் கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு போவேன்னு , நாளைக்கு வர்றவங்க கிட்டே சொல்லிரும்மா, ==>
புரியலே. வேலைக்கு போவாம, வீட்ல இருக்கணும்னு, இந்தக் காலத்துலயும்,அதுவும் ப்ளாக் எழுதும் பெண்கள் விரும்புறாங்களா?
<==
"நான் சொந்த காலுல நிக்கறதே வருஷத்துல இந்த ரெண்டு மாசம் தான் .
==>
பகுதி நேர வேலை மாதிரி, பகுதி நேர(2 மாச) சொந்தக்கால் =)
:: Not to Publish ::
Can you please send me your mail id to balaji.manoharan@gmail.com for further discussion about the contest?
http://vavaasangam.blogspot.com/2008/06/mail-id.html
Post a Comment