முதல் பதிவு : VISIT MILETUS: கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே இரண்டு முதல் முழு ஓய்வு !!!!!
ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்களின் வீழ்ச்சியும்
கதா நாயகர்கள் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களின் எழுச்சியும்
( வ வா சங்கத்து போட்டிக்கான பதிவு இல்லை )
ஒன்று : ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்களின் வீழ்ச்சி
தமிழ்த் திரைப்படங்களின் ஜாம்பவான்களான எம் ஜி ஆர் , சிவாஜி ஆகிய இருவரின் கால கட்டங்களில் சிறப்பாக இருந்த ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் கமல் ரஜினி ஆகிய இருவரின் வரவுக்கு பின்னரும் நன்றாகத்தான் இருந்தது . இருவரும் இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்த பின்னரே வீழ்ச்சி அடையத் துவங்கியது .
காரணங்கள் பலவாக இருந்தாலும் எனக்கு தெரிந்த சில காரணங்களை பட்டியல் இடுகிறேன் .
ஆரம்பங்களில் கதா நாயகனின் முழு வாழ்க்கையையும் சித்தரித்த தமிழ் சினிமா பின்னாளில் கதாநாயகனின் வாழ்க்கையில் நடந்த குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் காட்டியது .
சமுதாயத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பானது சிதைந்து , தனிக்குடித்தனம் உருவான பொது அது நம் திரைப்படங்களிலும் பிரதி பலித்தது . கூட்டுக்குடும்ப கதையாக இருந்தால் குறைந்த பட்சம் மூன்று கதாநாயகர்கள் பத்து குணசித்திர நடிகர்களாவது இருப்பார்கள் . ஆனால் பின்னாளில் நடந்ததே வேறு கதையும் சுருங்கி திரையில் நடிப்பவர்களும் (எண்ணிக்கையில்) குறைந்தனர். ( கலையில் ஏற்படும் மாற்றம் கலாச்சாரத்திலும் , கலாச்சாரத்தில் ஏற்படும் மாற்றம் கலையிலும் பிரதி பலிப்பதும் இயல்பே. )
ரெண்டு கதா நாயகர்கள் என்றால் , ஒருவருக்கு ஒருவர் இணையான கதா நாயகர்களால் இருந்தால் மட்டுமே திரைப்படம் சிறப்பாக அமையும் . எம் ஜி ஆர் , சிவாஜி (அதிகம் இணைந்து நடிக்க வில்லை என்றாலும் கூட ) அவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் கூட மற்றவர்களுக்காக (ஜெமினி கணேசன் எஸ் எஸ் ராஜேந்திரன் பாலாஜி ஏ வி எம் ராஜன் மற்றும் பலர் ) சிறப்பான பாத்திரங்களை ஒதுக்கினர் . ஆனால் கமல் ரஜினி இருவரும் அதிக பட்சம் தங்கள் படங்களில் சேர்த்துக் கொண்டதே , சரத் பாபுவை மட்டும் தான் .
(சில படங்கள் : " பார்த்தால் பசி தீரும் " ஒன்று போதாதா?
/ பாச மலர் / படித்தால் மட்டும் போதுமா / அவள் அப்படித்தான் / நினைத்தாலே இனிக்கும் / இளமை ஊஞ்சலாடுகிறது / அவர்கள் / பதினாறு வயதினிலே , சின்ன தம்பி பெரிய தம்பி / அக்னி நட்சத்திரம் / குருதிப் புனல் / பிரண்ட்ஸ் )
பின்னர் திரையுலகினர் கண்டு பிடித்த " பஞ்ச் " எனப்படும் பேஜாரான வசனங்களால் ரெண்டு கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்கள் முழுமையாக வீழ்ச்சி அடைந்தது.
அது தவிர ரெண்டு கதா நாயகர்கள் என்றால் ரெண்டு பேருக்கும் இணையான சம்பளம் , உடைகள் , தாங்கும் வசதி , சண்டைக் காட்சிகள் , பாடல்கள் , துணை / இணை வசதிகள் உள்பட (இணையான ) முக்கிய நடிகைகள் என தயாரிப்பாளரும் இயக்குனரும் திக்கித் திணறி , தட்டுத் தடுமாறினர் .
அவ்வப்போது தமிழில் சத்யராஜ்-பிரபு, பிரபு-கார்த்திக் , விஜய்-சூர்யா என படங்கள் வந்திருந்தாலும் அது அதிக எண்ணிக்கையில் இல்லை என்றே சொல்லலாம்.
மலையாளத்திலும் இந்தியிலும் இன்றும் ரெண்டு மூன்று கதா நாயகர்கள் நடித்த நல்ல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி அடைகின்றன.
முக்கியமாக மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன . அதே போன்ற திரைப்படங்கள் தமிழில் தற்போது வெளி வராதது வேதனையே .
இரண்டு : கதா நாயகர்கள் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களின் எழுச்சி
(ஆண்டவன் ஒரு வழியை அடித்தால் மற்றொரு வழியை திறப்பான் என்பது போல , தவறாக தீர்ப்பு எழுதியவர்களே அதை திருத்தி எழுதுவது போல ) தமிழ் சினிமா ரெட்டை நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் குறைந்தவுடன் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்தன .
ரெண்டு நாயகர்கள் இல்லை என்றானவுடன் கதைக்கு தேவைப்படும் மற்றொரு முக்கிய பாத்திரத்தை தாங்களே ஏற்று நடித்தனர் .
ரெட்டை வேடங்களிலும் வித்தியாசமான முகத் தோற்றம் , பேச்சு , உடை என பெரும் புதுமைகள் நடந்தது . அதில் பெரும் பங்கு கமல் ஹாசனையே சேரும் . உதாரணமாக கல்யாண ராமன் அபூர்வ சகோதரர்கள் (அப்பு )
விரைவில் முன்னணி நடிகராக மாற ரெட்டை வேடங்கள் பெரிதும் துணை புரிந்தன . அதில் வெகு சீக்கிரத்தில் பலனும் அடைந்தவர் நடிகர் சரத் குமார் மட்டுமே .
தற்போது ரெட்டை வேடங்களையும் தாண்டி மூன்று , நான்கு என தொடங்கி பத்து வரை வந்து விட்டது . இந்த நிலை தொடர்ந்தாள் நம்ம " ச்சின்ன பையன் " சொன்னது போலாகி விடும் . ( நன்றி ச்சின்ன பையன் -
http://boochandi.blogspot.com/2008/04/2030.html )
திரைப்படங்களில் ( கதைக்கு தேவை இல்லாத பட்சத்தில் ) நாயகர்களின் ரெட்டை வேடங்கள் குறைந்து , (கதைக்கு தேவைப் படுமெனில் ) ரெண்டு கதா நாயகர்களின் திரைப்படங்கள் வருவது எப்போது ?
அன்புடன்
கே ஆர் பி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சர்த்தான் தலை... !!!!!
சூப்பர்.
ரவி
THANKS RAVI
ANBUDAN
KRP
Post a Comment