Saturday, April 5, 2008

முதல் பதிவு

வணக்கம்
இது என்னுடைய முதல் பதிவு.

எந்த ஒரு துறையை சார்ந்த கலைஞனுடைய படைப்பும் இரண்டு பொது விதிகளை உள்ளடக்கியதாய் இருத்தல் அவசியம். (?????)

ஒன்று தம்முடைய படைப்பின் மூலம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பதிவு செய்வதாக அமைய வேண்டும். ( தாலி, கற்பு, குடும்ப அமைப்பு, விருந்தோம்பல் ?????)

இரண்டு தம்முடைய படைப்பின் மூலம் மக்களை யோசிக்க (சிந்திக்க) வைக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு சொல்வது கலைஞனின் கடமையன்று. அந்த பிரச்சனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்குவதே கலைஞனின் வேலை. (கலைஞன் மக்களை தேர்தலில் வாக்களிக்க தூண்ட வேண்டும் (?), ஆனால் இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என சொல்லக் கூடாது ????? அப்படி சொல்பவர் கலைஞன் அல்ல அரசியல்வாதி)

இந்த இரண்டு விசயங்களையுமே ஒருமித்து செய்வது என்பது கொஞ்சம் கடினம்.

மக்களை சிந்திக்க விடாமல் முடக்கி வைத்து இருப்பதே கலாச்சாரம், பண்பாடு என்ற விசயங்கள் தான் என்பது, மக்களை சிந்திக்க வைத்தவர்களின் (பெரியார், எம். ஆர். ராதா) எண்ணம்.

ஒருவேளை மக்களே சிந்தித்து இருந்திருந்தால், மற்றவர்கள் கலாச்சாரத்தில் கை வைக்காமல் இருந்திருப்பார்கள்.

நானும் முயற்சி செய்கிறேன்.

அன்புடன்
கே.ஆர்.பி



5 comments:

Anonymous said...

NICE

PRABHU RAJADURAI said...

வாழ்த்துகள்!

இரா. வசந்த குமார். said...

அன்பு கே.ஆர்.பி., இணையத் தமிழ் உலகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். வாழ்க...! வளர்க...!

தென்றல் said...

நல்வரவு..! வாழ்த்துக்கள்!!

Anonymous said...

அனைவருக்கும் நன்றி

ப்ளாக்கரை லாவகமாக கையாளும் சூட்சமம் , இன்னும் பிடிபட வில்லை .
அதனால் தான் பின்னூட்டத்திற்கு பதிலிடுவதில் தாமதம்

அன்புடன்
கே ஆர் பி