அண்ணாச்சி கடையும் ஆளுயர தராசும்
எந்த ஒரு வியாபார நிறுவனத்தின் உள்ளே நுழைந்தாலும் , அடையாளமாக முதலில் தெரிவது அங்கே தொங்கும் பெரிய தராசு தான். ஒரு வியாபாரியின் அடையாளமும் அதுதான்.
முதலாளியின் நேர் எதிராக தராசும், கைப் பக்கமாக பணப் பெட்டி அல்லது
முதலாளிக்கு முன்னால் பணப் பெட்டி கைப் பக்கமாக தராசு இதுதான் கடையின் முதலாளி அடையாளம்.
இந்த மின்னனு தராசு வந்தாலும் வந்தது , முதலாளிக்கு முன்னால் இருந்த (அல்லது இருக்க வேண்டிய ) தராசு , மின்சார வசதிவுள்ள பக்கம் சென்று விட்டது.
எந்த பொருளையும் நம் கண் முன்னே எடை போட்ட காலம் இப்போது இல்லை . இந்த அவசர உலகத்தில் அதற்கு யாருக்கும் நேரமில்லை.
தராசு எங்கே என்று கேட்டால் கடைக்கு பின்னால் அல்லது கிட்டங்கியில் இருக்கிறது என்கிறார்கள்.
இரண்டு தட்டுகள் இருந்த தராசில் (கடைக்காரர் தட்டு மற்றும் வாடிக்கையாளர் தட்டு ) இப்போது ஒரு தட்டு .
இப்படி காணாமல் போன கைத் தராசுகள் பற்றி, தராசு உற்பத்தி செய்யும் நண்பரிடம் விசாரித்த பொது அவர் அளித்த விளக்கம் :
உலகமய மாக்களின் பொது , பொருட்களின் தரத்தை விட , அதன் தோற்றம் பற்றிய அக்கறை அதிகமாகிப் போனது . மூட்டை மூட்டையாக பொருட்களை அனுப்பிய உற்பத்தியாளர்கள், தற்போது அதனை அவர்களே (உற்பத்தியாளர்கள் ) தேவையான சிறு சிறு அளவில் எடை போட்டு நன்றாக அலங்கரித்து அனுப்பி வைத்தனர் . இதுதான் முதற் பெரும் காரணம் . ( உலகமய மாக்களில் சிறு சிறு கடைகளே குறைந்து போயின அது தனி பதிவு )
இரண்டாவதாக தராசு உற்பத்தி செய்யும் மூலப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம் .
மூன்றாவதாக வந்தது தான் இந்த மின்னணு தராசுகள் .
நான்காவதாக மக்கள் ( இவர்களை சொல்லவில்லை என்றால் எப்படி) மின்னணு தராசில்
தான் எடை சரியாக இருக்கும் என்ற மக்களின் தவறான எண்ணம். (வாடிக்கையாளர் நல அமைப்பை சேர்ந்தவர்களை கேட்டால் , மின்னணு தராசில் நடக்கும் தவறுகளை சொல்வார்கள் )
வியாபார நிறுவனங்கள் , பழக கடைகள் , காய்கறி சந்தைகள் , பழைய பேப்பர் கடைகள் இப்படி எல்லா இடங்களிலும் இப்போது மின்னணு தராசு தான் , நடமாடும் கடைகள் தவிர .
பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குவது போல, கடையின் உள்ளே தொங்கிய தராசு (வியாபாரியின் அடையாளம் ) இப்போது இல்லை.
அன்புடன்
கே ஆர் பி
Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts
Sunday, June 8, 2008
Thursday, May 22, 2008
போடுங்கம்மா ஓட்டு
போடுங்கம்மா ஓட்டு
வ வா சங்கத்து போட்டியில் தங்களுக்கு பிடித்த படைப்புக்கு வாக்களியுங்கள்
ஓட்டு போடுவது நமது கடமை மட்டுமல்ல , நமது ( நமக்கு நல்லன கிடைப்பதற்கான ) உரிமையும் கூட .
எதுவுமே பிடிக்கலைன்னா ?
அரசியல் போலத்தான் இருப்பதில் சிறந்ததை தேர்வு செய்வது .
இனி சுய புராணம் .
என்னுடைய பதிவை படித்தீர்களா ? ரசித்தீர்களா ? பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.
http://visitmiletus.blogspot.com/2008/05/blog-post.html
http://visitmiletus.blogspot.com/2008/04/blog-post_24.html
பிற அல்லது மற்ற ( எது சரி ? ) பதிவர்களின் படைப்புகளுக்கும்,
தங்கள் பொன்னான வாக்கை பதிப்பதற்கும்
http://vavaasangam.blogspot.com/2008/05/blog-post_20.html
அரசியல் , தேர்தல் , வாக்குகள் என்றாலே இந்த திரைப்படமும், இந்த காட்சியும் கண்டிப்பாக நினைவுக்கு வருகின்றன. நீங்களும் ரசியுங்கள் !!!!!
http://www.youtube.com/watch?v=OF5ZhSzOyZs
அன்புடன்
கே ஆர் பி
வ வா சங்கத்து போட்டியில் தங்களுக்கு பிடித்த படைப்புக்கு வாக்களியுங்கள்
ஓட்டு போடுவது நமது கடமை மட்டுமல்ல , நமது ( நமக்கு நல்லன கிடைப்பதற்கான ) உரிமையும் கூட .
எதுவுமே பிடிக்கலைன்னா ?
அரசியல் போலத்தான் இருப்பதில் சிறந்ததை தேர்வு செய்வது .
இனி சுய புராணம் .
என்னுடைய பதிவை படித்தீர்களா ? ரசித்தீர்களா ? பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.
http://visitmiletus.blogspot.com/2008/05/blog-post.html
http://visitmiletus.blogspot.com/2008/04/blog-post_24.html
பிற அல்லது மற்ற ( எது சரி ? ) பதிவர்களின் படைப்புகளுக்கும்,
தங்கள் பொன்னான வாக்கை பதிப்பதற்கும்
http://vavaasangam.blogspot.com/2008/05/blog-post_20.html
அரசியல் , தேர்தல் , வாக்குகள் என்றாலே இந்த திரைப்படமும், இந்த காட்சியும் கண்டிப்பாக நினைவுக்கு வருகின்றன. நீங்களும் ரசியுங்கள் !!!!!
http://www.youtube.com/watch?v=OF5ZhSzOyZs
அன்புடன்
கே ஆர் பி
Tuesday, April 22, 2008
கிரிக்கெட் தெரியாமல் ஒரு கிரிக்கெட் பதிவு.
கிரிக்கெட்டை (மேட்ச் பிக்சிங், விளம்பரங்களில் காசு சேர்ப்பவர்கள் என்றெல்லாம்) விமர்சனம் செய்யாமல் , இன்னும் லீவு போட்டு கிரிக்கெட் பார்க்கும் அன்பு ரசிகர்களுக்காக இந்த பதிவு.
ஐ பி எல் கிரிக்கெட் குறித்து எனக்கு ஒரு சந்தேகம்.
உதாரணமாக கங்குலி தன்னோடு விளையாடும் ரிக்கி பாண்டிங்கிற்கு , அணித் தலைவர் என்ற முறையில் பிற (இந்திய ) ஆட்டக்காரர்களின் திறனை ஆலோசனையாக அல்லது கருத்தாக அளிக்க வேண்டி வரும்.
ஆனால் பின்னாளில் உலக கோப்பைக்காக ரிங்கியோடு மோதும் போது, இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்காது என்பது என்ன நிச்சயம்?
(அப்பாடா !! கிரிக்கெட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் பதிவு போட்டாச்சு. )
ஐ பி எல் கிரிக்கெட் குறித்து எனக்கு ஒரு சந்தேகம்.
உதாரணமாக கங்குலி தன்னோடு விளையாடும் ரிக்கி பாண்டிங்கிற்கு , அணித் தலைவர் என்ற முறையில் பிற (இந்திய ) ஆட்டக்காரர்களின் திறனை ஆலோசனையாக அல்லது கருத்தாக அளிக்க வேண்டி வரும்.
ஆனால் பின்னாளில் உலக கோப்பைக்காக ரிங்கியோடு மோதும் போது, இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்காது என்பது என்ன நிச்சயம்?
(அப்பாடா !! கிரிக்கெட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் பதிவு போட்டாச்சு. )
Tuesday, April 15, 2008
உங்களுக்கு இது போல் நேர்ந்ததா?
இது அண்மையில் எனக்கு நேர்ந்தது.
வெளிநாட்டில் பணிபுரியும் நான் வழக்கம் போல் ஒரு தமிழ் ஓட்டலுக்கு சென்றேன். தோசையை வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து எனக்கு எதிரில் அமர்ந்த ஒருவர் செல்போனில் யாரோடு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். திடீரென , நான் ஸ்பூனால் சாப்பிடாமல் கையால் சாப்பிடுவதை நண்பரிடம் விமர்சனம் செய்தவர், பின் மரியாதைக்குறைவாக திட்ட ஆரம்பித்தார். எனக்கு பாதியில் எழுந்து விடுவதை விட வேறு வழி தெரியவில்லை. நானும் எழுந்து வந்து விட்டேன்.
அவர் சொன்னது, "இந்தியாவில் இருந்து வந்துட்டானுங்க.நாகரீகம் இல்லாம, இதுல உலகம் முழுவதும் பரவி இருக்கிரானுங்க பேர் வேற".
அது தமிழ் ஓட்டல் தான் என்பதால், என்னைத்திட்டியவர் கண்டிப்பாக தமிழராக அல்லது இந்தியராக இருக்கணும்.
இது போல் மும்பை, டெல்லி வாழ் தமிழர்களுக்கு கூட ஏற்பட்டு இருக்கணும்.
உங்களுக்கு இது போல் நேர்ந்ததா? நீங்கள் என்ன செய்தீர்கள்?
நான் ஒருவழியா மனசை இப்படித்தான் தேத்திக்கிட்டேன் .
௧)நான் அன்னிக்கு உண்மையிலே அநாகரீகமா சாப்பிட்டு இருக்கணும்.
௨)வெளிநாடு வரைக்கும் வந்த நான், ஸ்பூனால சாப்பிடவும் பழகி இருக்கனும்.
வெங்காய தோசையை ஸ்பூனால சாப்பிடறது உண்மையிலே எனக்கு கஷ்டங்க. உங்களுக்கு?
அன்புடன்
கே. ஆர். பி.
வெளிநாட்டில் பணிபுரியும் நான் வழக்கம் போல் ஒரு தமிழ் ஓட்டலுக்கு சென்றேன். தோசையை வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து எனக்கு எதிரில் அமர்ந்த ஒருவர் செல்போனில் யாரோடு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். திடீரென , நான் ஸ்பூனால் சாப்பிடாமல் கையால் சாப்பிடுவதை நண்பரிடம் விமர்சனம் செய்தவர், பின் மரியாதைக்குறைவாக திட்ட ஆரம்பித்தார். எனக்கு பாதியில் எழுந்து விடுவதை விட வேறு வழி தெரியவில்லை. நானும் எழுந்து வந்து விட்டேன்.
அவர் சொன்னது, "இந்தியாவில் இருந்து வந்துட்டானுங்க.நாகரீகம் இல்லாம, இதுல உலகம் முழுவதும் பரவி இருக்கிரானுங்க பேர் வேற".
அது தமிழ் ஓட்டல் தான் என்பதால், என்னைத்திட்டியவர் கண்டிப்பாக தமிழராக அல்லது இந்தியராக இருக்கணும்.
இது போல் மும்பை, டெல்லி வாழ் தமிழர்களுக்கு கூட ஏற்பட்டு இருக்கணும்.
உங்களுக்கு இது போல் நேர்ந்ததா? நீங்கள் என்ன செய்தீர்கள்?
நான் ஒருவழியா மனசை இப்படித்தான் தேத்திக்கிட்டேன் .
௧)நான் அன்னிக்கு உண்மையிலே அநாகரீகமா சாப்பிட்டு இருக்கணும்.
௨)வெளிநாடு வரைக்கும் வந்த நான், ஸ்பூனால சாப்பிடவும் பழகி இருக்கனும்.
வெங்காய தோசையை ஸ்பூனால சாப்பிடறது உண்மையிலே எனக்கு கஷ்டங்க. உங்களுக்கு?
அன்புடன்
கே. ஆர். பி.
Thursday, April 10, 2008
நட்பு என்பது தற்காலிக நிலையா..............
உங்ககூட படிக்கிற அல்லது வேலை பார்க்கிற யாரையாவது நீங்க நண்பர்னு அறிமுகப்படுத்தினா, நீங்க இன்னும் அவரை உங்களோட சகோதரர், சகோதரி அல்லது இன்னும் ஏதேனும் உறவுக்குள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அப்படின்னு நினைக்கிறேன்.
வள்ளுவர் சொன்னது ஒருவரோடு நட்பு கொள்ளும் முன், அதை ஆராய்தல் அவசியம்னு. நான் என்ன நினைக்கிறேன்னா நட்பு என்கிற நிலையே, அவரை இன்னும் முழுமையாக ஆராய்கிற இடம்னு தான்.
இதிலே என்ன ஒரு பிரச்சனைன்னா பத்து பேரை சுலபமாநண்பர்கள்ன்னு சொல்றவங்க, அதே பத்து பேரை சகோதரர்கள்னு சொல்றதுக்கு யோசிப்பது தான்.
நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு, கூடா நட்பு பற்றி சொன்ன வள்ளுவர்கூட நட்பின் அடுத்த நிலை பற்றி சொல்லி இருக்கிறாரா? எனக்கு தெரியலை. ஆனால் கம்பர் அதைப்பற்றி யோசித்து இருக்கிறார்னு தான் சொல்லனும்.
ராமன் தன்னோட நட்பை பற்றி சொல்லும் போது, குகனோடு ஐவரானோம், அனுமனோடு அறுவரானோம் சொல்வதுதான் நட்பின் அடுத்த நிலை. ஆக நட்பு என்பதே ஒரு தற்காலிக நிலை தான்.
வள்ளுவர் சொன்னது ஒருவரோடு நட்பு கொள்ளும் முன், அதை ஆராய்தல் அவசியம்னு. நான் என்ன நினைக்கிறேன்னா நட்பு என்கிற நிலையே, அவரை இன்னும் முழுமையாக ஆராய்கிற இடம்னு தான்.
இதிலே என்ன ஒரு பிரச்சனைன்னா பத்து பேரை சுலபமாநண்பர்கள்ன்னு சொல்றவங்க, அதே பத்து பேரை சகோதரர்கள்னு சொல்றதுக்கு யோசிப்பது தான்.
நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு, கூடா நட்பு பற்றி சொன்ன வள்ளுவர்கூட நட்பின் அடுத்த நிலை பற்றி சொல்லி இருக்கிறாரா? எனக்கு தெரியலை. ஆனால் கம்பர் அதைப்பற்றி யோசித்து இருக்கிறார்னு தான் சொல்லனும்.
ராமன் தன்னோட நட்பை பற்றி சொல்லும் போது, குகனோடு ஐவரானோம், அனுமனோடு அறுவரானோம் சொல்வதுதான் நட்பின் அடுத்த நிலை. ஆக நட்பு என்பதே ஒரு தற்காலிக நிலை தான்.
கமல் ஹாசனிடம் ஒரு முறை உங்கள் " நண்பர் சந்தான பாரதி " பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது அவர் சொன்னது. " பாரதி எனக்கு ஒரு நல்ல தம்பி, என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல சித்தப்பா " என்பது தான்.
(ஆக அடுத்த நிலைக்கு போகனும்னா, நாம் அல்லது நம்முடைய நண்பர் யாரோ ஒருத்தர் இன்னும் உண்மையான மற்றும் முழுமையான அன்போட நெருங்குவது தான் சரி. !!!!! )
நட்பையே யோசிக்கும் போது ஆண் நட்பு, பெண் நட்பு பற்றி எல்லாம் பேசுவது தேவையில்லைன்னு நினைக்கிறேன்.
அன்புடன்
கே. ஆர். பி
Saturday, April 5, 2008
முதல் பதிவு
வணக்கம்
இது என்னுடைய முதல் பதிவு.
எந்த ஒரு துறையை சார்ந்த கலைஞனுடைய படைப்பும் இரண்டு பொது விதிகளை உள்ளடக்கியதாய் இருத்தல் அவசியம். (?????)
ஒன்று தம்முடைய படைப்பின் மூலம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பதிவு செய்வதாக அமைய வேண்டும். ( தாலி, கற்பு, குடும்ப அமைப்பு, விருந்தோம்பல் ?????)
இரண்டு தம்முடைய படைப்பின் மூலம் மக்களை யோசிக்க (சிந்திக்க) வைக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு சொல்வது கலைஞனின் கடமையன்று. அந்த பிரச்சனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்குவதே கலைஞனின் வேலை. (கலைஞன் மக்களை தேர்தலில் வாக்களிக்க தூண்ட வேண்டும் (?), ஆனால் இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என சொல்லக் கூடாது ????? அப்படி சொல்பவர் கலைஞன் அல்ல அரசியல்வாதி)
இந்த இரண்டு விசயங்களையுமே ஒருமித்து செய்வது என்பது கொஞ்சம் கடினம்.
மக்களை சிந்திக்க விடாமல் முடக்கி வைத்து இருப்பதே கலாச்சாரம், பண்பாடு என்ற விசயங்கள் தான் என்பது, மக்களை சிந்திக்க வைத்தவர்களின் (பெரியார், எம். ஆர். ராதா) எண்ணம்.
ஒருவேளை மக்களே சிந்தித்து இருந்திருந்தால், மற்றவர்கள் கலாச்சாரத்தில் கை வைக்காமல் இருந்திருப்பார்கள்.
நானும் முயற்சி செய்கிறேன்.
அன்புடன்
கே.ஆர்.பி
இது என்னுடைய முதல் பதிவு.
எந்த ஒரு துறையை சார்ந்த கலைஞனுடைய படைப்பும் இரண்டு பொது விதிகளை உள்ளடக்கியதாய் இருத்தல் அவசியம். (?????)
ஒன்று தம்முடைய படைப்பின் மூலம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பதிவு செய்வதாக அமைய வேண்டும். ( தாலி, கற்பு, குடும்ப அமைப்பு, விருந்தோம்பல் ?????)
இரண்டு தம்முடைய படைப்பின் மூலம் மக்களை யோசிக்க (சிந்திக்க) வைக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு சொல்வது கலைஞனின் கடமையன்று. அந்த பிரச்சனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்குவதே கலைஞனின் வேலை. (கலைஞன் மக்களை தேர்தலில் வாக்களிக்க தூண்ட வேண்டும் (?), ஆனால் இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என சொல்லக் கூடாது ????? அப்படி சொல்பவர் கலைஞன் அல்ல அரசியல்வாதி)
இந்த இரண்டு விசயங்களையுமே ஒருமித்து செய்வது என்பது கொஞ்சம் கடினம்.
மக்களை சிந்திக்க விடாமல் முடக்கி வைத்து இருப்பதே கலாச்சாரம், பண்பாடு என்ற விசயங்கள் தான் என்பது, மக்களை சிந்திக்க வைத்தவர்களின் (பெரியார், எம். ஆர். ராதா) எண்ணம்.
ஒருவேளை மக்களே சிந்தித்து இருந்திருந்தால், மற்றவர்கள் கலாச்சாரத்தில் கை வைக்காமல் இருந்திருப்பார்கள்.
நானும் முயற்சி செய்கிறேன்.
அன்புடன்
கே.ஆர்.பி
Subscribe to:
Posts (Atom)