Thursday, May 22, 2008

போடுங்கம்மா ஓட்டு

போடுங்கம்மா ஓட்டு

வ வா சங்கத்து போட்டியில் தங்களுக்கு பிடித்த படைப்புக்கு வாக்களியுங்கள்
ஓட்டு போடுவது நமது கடமை மட்டுமல்ல , நமது ( நமக்கு நல்லன கிடைப்பதற்கான ) உரிமையும் கூட .

எதுவுமே பிடிக்கலைன்னா ?
அரசியல் போலத்தான் இருப்பதில் சிறந்ததை தேர்வு செய்வது .

இனி சுய புராணம் .
என்னுடைய பதிவை படித்தீர்களா ? ரசித்தீர்களா ? பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.
http://visitmiletus.blogspot.com/2008/05/blog-post.html
http://visitmiletus.blogspot.com/2008/04/blog-post_24.html

பிற அல்லது மற்ற ( எது சரி ? ) பதிவர்களின் படைப்புகளுக்கும்,
தங்கள் பொன்னான வாக்கை பதிப்பதற்கும்
http://vavaasangam.blogspot.com/2008/05/blog-post_20.html


அரசியல் , தேர்தல் , வாக்குகள் என்றாலே இந்த திரைப்படமும், இந்த காட்சியும் கண்டிப்பாக நினைவுக்கு வருகின்றன. நீங்களும் ரசியுங்கள் !!!!!
http://www.youtube.com/watch?v=OF5ZhSzOyZs

அன்புடன்
கே ஆர் பி

Wednesday, May 7, 2008

குசேலன் – ரஜினி ஆசைப்பட்ட சினிமா

குசேலன் – ரஜினி ஆசைப்பட்ட சினிமா

குசேலன் படப்பிடிப்பு துவக்கம்
ரஜினிக்காக கதையில் மாற்றம்
பல கோடிக்கு வியாபாரம்
கமல் நடிக்கிறார்
முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்
ஜுலையில் படம் வெளியாகும்

குசெலனைப் பற்றிய செய்திகள் வரத்துவங்கி விட்டது .

எல்லாம் சரி . குசேலன் - ரஜினி ஆசைப்பட்ட “ கதா பறையும் போல் ” படம் போல இருக்குமா ?


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


" கதா பறையும் போல் " சினிமாவில் கதா ஆசிரியர் சீனிவாசன் ( மக்களுக்கு ) சொன்னது :-

பிரபலமான ஒரு நடிகர் (தனிப்பட்ட வாழ்க்கையில் ) தான் நடிகராக உதவிய , மற்றும் தன்னுடைய பால்யத்தில் தன்னை நன்கு கவனித்துக் கொண்ட ஒரு மனிதன் மேல் இருக்கும் அன்பு அல்லது நன்றியை பற்றியது . (இது ரஜினிக்கு முழுமையாக பொருந்தும் )

ஆனால் அந்த நடிகர் தனது நடிப்பு தொழிலில் அல்லது பொது வாழ்க்கையில் , அவர் எளிதில் கான அல்லது நெருங்க முடியாதவராக , ஒரு நடிகராகத்தான் இருக்கிறார் . (இது ரஜினிக்கு பொருந்துமா ? )

“ என்னைப்பற்றிய படம் ” என்று கண்டிப்பாக ரஜினி இதற்கு ஆசைபட்டிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


" கதா பறையும் போல் " சினிமாவில் கதா ஆசிரியர் சீனிவாசன் ( திரை உலகினருக்கு ) சொன்னது :-

ஊடகங்கள் அனைத்துமே மக்களுக்கானது .சினிமா என்பது ஒரு எளிய ஊடகமாக இருக்க வேண்டும் . மிக எளிமையான கதை , வசனம் , நடிப்பு , நடிகர்கள் , நடிகைகள் , குறைந்த முதலீடு . சீனிவாசனின் அனைத்து திரைப் படங்களிலும் உள்ள செய்தி இது தான் .

சீனிவாசனின் அனைத்து படங்களையும் பார்த்தவர்களுக்கு இது புரியும் .
ஒரு வேலை ரஜினி இதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்பார் என்றே நான் நம்புகிறேன்.

பணத்தில் புரள வேண்டிய கதையோ அல்லது திரைப்படமோ , கண்டிப்பாக இது இல்லை .

ஆனால் மீண்டும் மீண்டும் திரை உலகினர் சினிமா என்பது எளிய மக்களுக்கானது இல்லை என்றே நிரூபித்து வருகிறார்கள் .

ஒருவேளை ரஜினி ஆசைப்படாமல் இருந்திருந்தால் , ஒரு புதிய தயாரிப்பாளர் அல்லது அறிமுக இயக்குனர் இதை முயற்சி செய்திருப்பார் .

ரஜினி ஆசைப்பட்ட ஒரே காரணத்தினால் மீண்டும் " சினிமா என்ற ஊடகம் எளிய மக்களுக்கானது இல்லை " என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்த கோடம்பாக்க வல்லுனர்கள் தங்கள் கைப்பக்குவத்தையும் திறமையையும் வேறு எதாவது ( நல்ல ) படங்களில் காட்டியிருக்கலாம்

இனிமேல்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ரஜினி இனிமேலும் இது போன்ற எளிய திரைப் படங்களின் மீது ஆசைப்பட மாட்டார் என்றே நம்புவோமாக .

ரஜினி “ கதா பறையும் போல் “ படத்தை பலமுறை பார்த்ததாக பெட்டியில் தெரிவித்து இருந்த்தார் . குசேலன் வெளியாகிற தினத்தன்று " கதா பறையும் போல் " படத்தை மீண்டும் ஒரு பார்த்தால் நன்றாக இருக்கும்

இனிமேலும் இது போன்ற நல்ல எளிய சினிமாக்கள் , தமிழில் வர்ணம் பூசி , வேறு வடிவம் எடுக்குமானால் , அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ் சினிமாவை எளிய ஊடகமாக மாற்ற முடியாது .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
கே ஆர் பி

Thursday, May 1, 2008

கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்

கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்

வ வா சங்கத்து போட்டிக்கான எனது ரெண்டாவது பதிவு

இந்த வாரம் ஊருக்கு வரணும்னு போன் வரும்போதே நினைச்சேன் இந்த தடவையும் பொண்ணு பார்க்க வரப்போராங்கன்னு .

நான் நினைச்சதும் சரியா தான் இருந்தது , சாந்தி அக்கா தான் வாசல்லையே நின்னுச்சே. தெரு முக்குலே திரும்பும் போதே , என்னைய பார்த்துட்ட அக்கா , பாதி தூரம் வந்துருச்சு. ரயில் இப்பத்தான் வந்ததா கேட்டுக்கிட்டே என் பெட்டியை கையில வாங்கிட்டு வீட்டுக்கு உள்ள போயிருச்சு . என்னோட அறைக்கு போயி நான் நைட்டியை தேடி எடுத்து மாத்தறதுக்குள்ளே காப்பியை கொண்டு வந்து கொடுத்துருச்சு . அதான் சாந்தி அக்கா.

வீட்டுல என்ன விசெஷம்னாலும் சாந்தி அக்கா இல்லைன்னா , அம்மாவுக்கு வேலையே ஓடாது. அக்கா கொஞ்சம் அம்மா வழி தூரத்து சொந்தம் . பக்கத்து தெருவுல இருந்தாலும் , அங்கன சோத்தபொங்கி வச்சுட்டு இங்க வந்துரும் . எங்க வீட்டுலயா இருக்கறதுனால அக்கா , அம்மாவுக்கு முக்கியமான ஆளு.

நான் குளிச்சுட்டு வர்றேக்கான்னு சொல்லும் போதே , சிரிச்சுக்கிட்டே
நாளைக்கு தான் பொண்ணு பார்க்க வாரங்கன்னு , சொல்லிட்டு உள்ள போயிருச்சு. அம்மாவும் , நாளைக்குத்தான் வர்றாங்க , நீ சீக்கிரம் குளிச்சுட்டு வா , திருச்செந்தூர் கோவிலுக்கு போவோம்னு சொல்லிக்கிட்டே உள்ள போய்ட்டாங்க .

பஸ்ல கூட்டம் அதிகம் இல்லை. எனக்கும் அம்மாவுக்கும் நாலாவது சீட்டுல தான் இடம் கிடைச்சுது. பஸ் கிளம்பின உடனேயே , அம்மாவுக்கு எதோ சிந்தனை , திரும்பி பார்த்தேன். என்னம்ம்மா திடீரென கொவிளுக்குன்னு கேட்டேன் , இந்த வரனாவது நல்ல படி அமையனும்னு தான் , நீவேனா தூக்கம் வந்தா தூங்குன்னு சொன்ன அம்மா முகத்திலே கவலைக்கொடுகள் .


ராத்திரி நல்ல தூக்கம் இல்லாததுனாலே , எனக்கும் அலுப்பா தான் இருந்தது. பஸ்ல நானும் நல்லா தூங்கிட்டேன். திடீரென முழிச்சு பார்த்தேன் , பஸ் நின்னுக்கிட்டு இருந்தது. என்னைய திரும்பி பார்த்த அம்மா , "அம்மன் புறம் ரயில்வே கேட்டு " ன்னு சொன்னாங்க.

கேட்டு கதவுல எதோ பிரச்சனையாம், பூட்டு திறக்க முடியலையாம் பக்கத்து சீட்டு பொம்பளை யார் கிட்டயோ சொல்லிக்கிட்டு இருந்தது. பஸ்சுக்கு உள்ளார பார்த்தா, உள்ள பாதி கூட்டம் தான் இருந்தது. மீதி கூட்டம் கீழ தான் இருந்தது.

நானும் இறங்கிட்டேன். அந்த பக்கம் இந்த பக்கம் கடையே இல்லை.
கொஞ்சம் தள்ளி ஒரு இளனி கடை , அதுக்கு பக்கத்துல ஒரு பொம்பளை கீழ உட்கார்ந்து ஓலை விசிறி செஞ்சுகிட்டு இருந்தது. பக்கத்துலேயே ஒரு தொட்டில்ல குழந்தை.

குழந்தையையும் குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு , ஆள் இல்லாத நேரம் இளனி கடையை பார்த்துக்கிறதே ரொம்ப கஷ்டம் , இதுல விசிறி விற்பனை வேறயா ? , கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக கூடாதுன்கிற எண்ணம் இருந்த எனக்கு இது ரொம்ப வித்தியாசமா இருந்தது. என்னால முடியலை , பக்கத்துல போயி அந்த பொண்ணு கிட்டே கேட்டுட்டேன்.

அவள் சொன்னது இது தான் " இந்த விசிறி செய்யறது எங்க மாமியார் தான் சொல்லி கொடுத்தது. ஒரு விசிறி செஞ்சா முக்கா ரூபா கிடைக்கும். அவ்வளவுதான். ரெண்டு மாசம் மத்த வேலையோட விசிறியும் செய்யறது கொஞ்சம் கஷ்டம் தான் , ஆனா "நான் சொந்த காலுல நிக்கறதே வருஷத்துல இந்த ரெண்டு மாசம் தான் " அதனால தான் கல்யாணத்துல இருந்தே இதை விடாம செஞ்சுக்கிட்டு இருக்கேன் "


எனக்கு அதுக்கு மேல என்ன பேசறதுன்னே தெரியலை. நான் திரும்பி வந்துட்டேன்.

நான் கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு போவேன்னு , நாளைக்கு வர்றவங்க கிட்டே சொல்லிரும்மா, என்ற என்னை பார்த்த அம்மா முகத்தில் இம்முறை கவலைக் கோலங்கள் .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
கே ஆர் பி

=============================================================
மலையாள தனியார் தொலைக் காட்சி செய்திகள் ஓலை பின்னும் பெண்களை இரண்டு நிமிடம் காட்டினார்கள். அடுத்த இருபத்து நிமிடத்தில் விளைந்த கற்பனை .

கதை வெறும் மூன்று மணி நேரம் என்பதால் ஆண் கதா பாத்திரங்கள் தேவைப் படவில்லை . (மூன்று பேருக்குமே கணவர்கள் இருந்தாலும் அவர்களைப் பற்றி சொல்லப் படவில்லை ) .

அனைத்துமே பெண் பாத்திரங்களாக அமைந்தன . (மாப்பிள்ளை வீட்டுக் காரர்கள் வருகிறார்கள் என்று கூட சொல்லாமல், பெண் பார்க்க வருகிறார்கள் என்றே எழுதினேன் )

எந்த பெண்ணைப் பற்றிய கதை என்றே தெரியக் கூடாது என்பதற்காக , அனைவரையுமே சரி சமமாக எழுத முயற்சித்தேன்.

மாமியாரும் மருமகளும் எப்படிப்பட்ட வராக இருந்தாலும் , பெண் விடுதலை , பெண் பற்றிய சிந்தனைகளில் அவர்கள் ஒரே எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது என் எண்ணம் .

=============================================================