விருதே ஒரு பாரியா - போன வாரம் இந்த மலையாளம் படத்தை மலையாளிகளோடு பார்த்தேன். வழக்கம் போல மலையாளிகளோடு பேசியதில் படத்தை பற்றி சில விஷயங்களை சொன்னார்கள்.
ஒன்று : படம் முழுக்க முழுக்க சீனிவாசனின் நடிப்பையும் , திரைப்படங்களையும் (குறிப்பாக வடக்கு நோக்கி எந்திரம் ) நினைவு படுத்துகின்றன. (அதாவது நகைச்சுவையும் ஜெயராமின் வசனங்களும் )
ஒரு சில காட்சிகள் அப்படி இருந்தாலும் , எனக்கென்னவோ இந்த படம் சீனிவாசனை நினைவு படுத்தவில்லை. ஏன் என்றால் சீனிவாசனின் நக்கல் மற்றும் நையாண்டி நேரடியாக அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தையும் , பொது மக்களின் கையாலாகாத தனத்தை தாக்குவதாக இருக்கும். தைரியமாக சீனிவாசன் கருத்து சொல்லக் கூடியவர். எந்த இயக்குனராக இருந்தாலும் சீனிவாசன் தனித்து நிற்பதற்கே இதுவே காரணம்.
ஆனால் ஜெயராமோ அல்லது இயக்குனரோ தைர்யமாக நில்லாமல், முல்லைப் பெரியாரை பற்றி குடித்து விட்டு உளறுவதாக கட்சியை அமைத்து விட்டார்கள். ( கருத்து எதுவும் சொல்லாத நிலையில் , முல்லைப் பெரியார் என்ற ஒரு வார்த்தைக்கு கைத்தட்டியது வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. ) அதை போலவே நகைச்சுவை காட்சிகளும் சீனிவாசனை நினைவு படுத்த வில்லை. அவை வழக்கமான ஜெயராமின் காட்சிகளே எனலாம்.
இரண்டு : மறு பாதியில் படம் ஒரே பிரச்சனையில் நின்று விட்டது என்றார்கள்.
அந்த செய்தி தான் திரைப்படத்தில் இயக்குனர் சொல்ல வந்தது என்றே நான் நினைக்கிறேன்.
பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், அஷ்டாவதானியாக உருமாறி தீர்ப்பவர்கள் பெண்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. ஒரு பிரச்சனை வந்தால் அதை விட்டு வெளியே வருவதற்குள் , அவர்கள் விழி பிதுங்கி விடும் .
அது போலவே முதல் பாதியில் கோபிகா பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கிறார். மறு பாதியில் ஜெயரமோ ஒரே பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தீர்க்க முடியாமல் அவஸ்தை படுகிறார்.
மொத்தத்தில் இயக்குனர் கதையை போரடிக்காமல் எடுத்து இருந்தார் என்றே சொல்லலாம்.
கோபிகா அவமானம் மற்றும் பிரச்சனை நடக்கும் பொது , பிரச்சனையை பெரிதாக்காமல் , நின்று யோசித்து , பேசி , பின் வீட்டை விட்டு வெளியேறுவது ,
அது போல மின்சார துறைக்காக பொது மக்களிடம் போராடும் பொறுப்பான ஜெயராம் , அலுவலகத்தில் பொறுப்பில்லாமல் நடப்பது மற்றும்
அனாதையான ஜெயராம் உறவுக்கு அலைபவராக இல்லாமல் , உறவுகளை அவமதிப்பவராக இருப்பது என பாத்திரங்களை படைத்து இருந்தார் இயக்குனர்
அன்புடன்
கே ஆர் பி
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
Friday, October 17, 2008
Wednesday, May 7, 2008
குசேலன் – ரஜினி ஆசைப்பட்ட சினிமா
குசேலன் – ரஜினி ஆசைப்பட்ட சினிமா
குசேலன் படப்பிடிப்பு துவக்கம்
ரஜினிக்காக கதையில் மாற்றம்
பல கோடிக்கு வியாபாரம்
கமல் நடிக்கிறார்
முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்
ஜுலையில் படம் வெளியாகும்
குசெலனைப் பற்றிய செய்திகள் வரத்துவங்கி விட்டது .
எல்லாம் சரி . குசேலன் - ரஜினி ஆசைப்பட்ட “ கதா பறையும் போல் ” படம் போல இருக்குமா ?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
" கதா பறையும் போல் " சினிமாவில் கதா ஆசிரியர் சீனிவாசன் ( மக்களுக்கு ) சொன்னது :-
பிரபலமான ஒரு நடிகர் (தனிப்பட்ட வாழ்க்கையில் ) தான் நடிகராக உதவிய , மற்றும் தன்னுடைய பால்யத்தில் தன்னை நன்கு கவனித்துக் கொண்ட ஒரு மனிதன் மேல் இருக்கும் அன்பு அல்லது நன்றியை பற்றியது . (இது ரஜினிக்கு முழுமையாக பொருந்தும் )
ஆனால் அந்த நடிகர் தனது நடிப்பு தொழிலில் அல்லது பொது வாழ்க்கையில் , அவர் எளிதில் கான அல்லது நெருங்க முடியாதவராக , ஒரு நடிகராகத்தான் இருக்கிறார் . (இது ரஜினிக்கு பொருந்துமா ? )
“ என்னைப்பற்றிய படம் ” என்று கண்டிப்பாக ரஜினி இதற்கு ஆசைபட்டிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
" கதா பறையும் போல் " சினிமாவில் கதா ஆசிரியர் சீனிவாசன் ( திரை உலகினருக்கு ) சொன்னது :-
ஊடகங்கள் அனைத்துமே மக்களுக்கானது .சினிமா என்பது ஒரு எளிய ஊடகமாக இருக்க வேண்டும் . மிக எளிமையான கதை , வசனம் , நடிப்பு , நடிகர்கள் , நடிகைகள் , குறைந்த முதலீடு . சீனிவாசனின் அனைத்து திரைப் படங்களிலும் உள்ள செய்தி இது தான் .
சீனிவாசனின் அனைத்து படங்களையும் பார்த்தவர்களுக்கு இது புரியும் .
ஒரு வேலை ரஜினி இதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்பார் என்றே நான் நம்புகிறேன்.
பணத்தில் புரள வேண்டிய கதையோ அல்லது திரைப்படமோ , கண்டிப்பாக இது இல்லை .
ஆனால் மீண்டும் மீண்டும் திரை உலகினர் சினிமா என்பது எளிய மக்களுக்கானது இல்லை என்றே நிரூபித்து வருகிறார்கள் .
ஒருவேளை ரஜினி ஆசைப்படாமல் இருந்திருந்தால் , ஒரு புதிய தயாரிப்பாளர் அல்லது அறிமுக இயக்குனர் இதை முயற்சி செய்திருப்பார் .
ரஜினி ஆசைப்பட்ட ஒரே காரணத்தினால் மீண்டும் " சினிமா என்ற ஊடகம் எளிய மக்களுக்கானது இல்லை " என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த கோடம்பாக்க வல்லுனர்கள் தங்கள் கைப்பக்குவத்தையும் திறமையையும் வேறு எதாவது ( நல்ல ) படங்களில் காட்டியிருக்கலாம்
இனிமேல்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரஜினி இனிமேலும் இது போன்ற எளிய திரைப் படங்களின் மீது ஆசைப்பட மாட்டார் என்றே நம்புவோமாக .
ரஜினி “ கதா பறையும் போல் “ படத்தை பலமுறை பார்த்ததாக பெட்டியில் தெரிவித்து இருந்த்தார் . குசேலன் வெளியாகிற தினத்தன்று " கதா பறையும் போல் " படத்தை மீண்டும் ஒரு பார்த்தால் நன்றாக இருக்கும்
இனிமேலும் இது போன்ற நல்ல எளிய சினிமாக்கள் , தமிழில் வர்ணம் பூசி , வேறு வடிவம் எடுக்குமானால் , அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ் சினிமாவை எளிய ஊடகமாக மாற்ற முடியாது .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
கே ஆர் பி
குசேலன் படப்பிடிப்பு துவக்கம்
ரஜினிக்காக கதையில் மாற்றம்
பல கோடிக்கு வியாபாரம்
கமல் நடிக்கிறார்
முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்
ஜுலையில் படம் வெளியாகும்
குசெலனைப் பற்றிய செய்திகள் வரத்துவங்கி விட்டது .
எல்லாம் சரி . குசேலன் - ரஜினி ஆசைப்பட்ட “ கதா பறையும் போல் ” படம் போல இருக்குமா ?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
" கதா பறையும் போல் " சினிமாவில் கதா ஆசிரியர் சீனிவாசன் ( மக்களுக்கு ) சொன்னது :-
பிரபலமான ஒரு நடிகர் (தனிப்பட்ட வாழ்க்கையில் ) தான் நடிகராக உதவிய , மற்றும் தன்னுடைய பால்யத்தில் தன்னை நன்கு கவனித்துக் கொண்ட ஒரு மனிதன் மேல் இருக்கும் அன்பு அல்லது நன்றியை பற்றியது . (இது ரஜினிக்கு முழுமையாக பொருந்தும் )
ஆனால் அந்த நடிகர் தனது நடிப்பு தொழிலில் அல்லது பொது வாழ்க்கையில் , அவர் எளிதில் கான அல்லது நெருங்க முடியாதவராக , ஒரு நடிகராகத்தான் இருக்கிறார் . (இது ரஜினிக்கு பொருந்துமா ? )
“ என்னைப்பற்றிய படம் ” என்று கண்டிப்பாக ரஜினி இதற்கு ஆசைபட்டிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
" கதா பறையும் போல் " சினிமாவில் கதா ஆசிரியர் சீனிவாசன் ( திரை உலகினருக்கு ) சொன்னது :-
ஊடகங்கள் அனைத்துமே மக்களுக்கானது .சினிமா என்பது ஒரு எளிய ஊடகமாக இருக்க வேண்டும் . மிக எளிமையான கதை , வசனம் , நடிப்பு , நடிகர்கள் , நடிகைகள் , குறைந்த முதலீடு . சீனிவாசனின் அனைத்து திரைப் படங்களிலும் உள்ள செய்தி இது தான் .
சீனிவாசனின் அனைத்து படங்களையும் பார்த்தவர்களுக்கு இது புரியும் .
ஒரு வேலை ரஜினி இதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்பார் என்றே நான் நம்புகிறேன்.
பணத்தில் புரள வேண்டிய கதையோ அல்லது திரைப்படமோ , கண்டிப்பாக இது இல்லை .
ஆனால் மீண்டும் மீண்டும் திரை உலகினர் சினிமா என்பது எளிய மக்களுக்கானது இல்லை என்றே நிரூபித்து வருகிறார்கள் .
ஒருவேளை ரஜினி ஆசைப்படாமல் இருந்திருந்தால் , ஒரு புதிய தயாரிப்பாளர் அல்லது அறிமுக இயக்குனர் இதை முயற்சி செய்திருப்பார் .
ரஜினி ஆசைப்பட்ட ஒரே காரணத்தினால் மீண்டும் " சினிமா என்ற ஊடகம் எளிய மக்களுக்கானது இல்லை " என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த கோடம்பாக்க வல்லுனர்கள் தங்கள் கைப்பக்குவத்தையும் திறமையையும் வேறு எதாவது ( நல்ல ) படங்களில் காட்டியிருக்கலாம்
இனிமேல்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரஜினி இனிமேலும் இது போன்ற எளிய திரைப் படங்களின் மீது ஆசைப்பட மாட்டார் என்றே நம்புவோமாக .
ரஜினி “ கதா பறையும் போல் “ படத்தை பலமுறை பார்த்ததாக பெட்டியில் தெரிவித்து இருந்த்தார் . குசேலன் வெளியாகிற தினத்தன்று " கதா பறையும் போல் " படத்தை மீண்டும் ஒரு பார்த்தால் நன்றாக இருக்கும்
இனிமேலும் இது போன்ற நல்ல எளிய சினிமாக்கள் , தமிழில் வர்ணம் பூசி , வேறு வடிவம் எடுக்குமானால் , அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ் சினிமாவை எளிய ஊடகமாக மாற்ற முடியாது .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
கே ஆர் பி
Saturday, April 26, 2008
ரெண்டு கதா நாயகர்கள் - கதா நாயகர்களின் ரெண்டு வேடங்கள்
முதல் பதிவு : VISIT MILETUS: கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே இரண்டு முதல் முழு ஓய்வு !!!!!
ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்களின் வீழ்ச்சியும்
கதா நாயகர்கள் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களின் எழுச்சியும்
( வ வா சங்கத்து போட்டிக்கான பதிவு இல்லை )
ஒன்று : ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்களின் வீழ்ச்சி
தமிழ்த் திரைப்படங்களின் ஜாம்பவான்களான எம் ஜி ஆர் , சிவாஜி ஆகிய இருவரின் கால கட்டங்களில் சிறப்பாக இருந்த ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் கமல் ரஜினி ஆகிய இருவரின் வரவுக்கு பின்னரும் நன்றாகத்தான் இருந்தது . இருவரும் இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்த பின்னரே வீழ்ச்சி அடையத் துவங்கியது .
காரணங்கள் பலவாக இருந்தாலும் எனக்கு தெரிந்த சில காரணங்களை பட்டியல் இடுகிறேன் .
ஆரம்பங்களில் கதா நாயகனின் முழு வாழ்க்கையையும் சித்தரித்த தமிழ் சினிமா பின்னாளில் கதாநாயகனின் வாழ்க்கையில் நடந்த குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் காட்டியது .
சமுதாயத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பானது சிதைந்து , தனிக்குடித்தனம் உருவான பொது அது நம் திரைப்படங்களிலும் பிரதி பலித்தது . கூட்டுக்குடும்ப கதையாக இருந்தால் குறைந்த பட்சம் மூன்று கதாநாயகர்கள் பத்து குணசித்திர நடிகர்களாவது இருப்பார்கள் . ஆனால் பின்னாளில் நடந்ததே வேறு கதையும் சுருங்கி திரையில் நடிப்பவர்களும் (எண்ணிக்கையில்) குறைந்தனர். ( கலையில் ஏற்படும் மாற்றம் கலாச்சாரத்திலும் , கலாச்சாரத்தில் ஏற்படும் மாற்றம் கலையிலும் பிரதி பலிப்பதும் இயல்பே. )
ரெண்டு கதா நாயகர்கள் என்றால் , ஒருவருக்கு ஒருவர் இணையான கதா நாயகர்களால் இருந்தால் மட்டுமே திரைப்படம் சிறப்பாக அமையும் . எம் ஜி ஆர் , சிவாஜி (அதிகம் இணைந்து நடிக்க வில்லை என்றாலும் கூட ) அவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் கூட மற்றவர்களுக்காக (ஜெமினி கணேசன் எஸ் எஸ் ராஜேந்திரன் பாலாஜி ஏ வி எம் ராஜன் மற்றும் பலர் ) சிறப்பான பாத்திரங்களை ஒதுக்கினர் . ஆனால் கமல் ரஜினி இருவரும் அதிக பட்சம் தங்கள் படங்களில் சேர்த்துக் கொண்டதே , சரத் பாபுவை மட்டும் தான் .
(சில படங்கள் : " பார்த்தால் பசி தீரும் " ஒன்று போதாதா?
/ பாச மலர் / படித்தால் மட்டும் போதுமா / அவள் அப்படித்தான் / நினைத்தாலே இனிக்கும் / இளமை ஊஞ்சலாடுகிறது / அவர்கள் / பதினாறு வயதினிலே , சின்ன தம்பி பெரிய தம்பி / அக்னி நட்சத்திரம் / குருதிப் புனல் / பிரண்ட்ஸ் )
பின்னர் திரையுலகினர் கண்டு பிடித்த " பஞ்ச் " எனப்படும் பேஜாரான வசனங்களால் ரெண்டு கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்கள் முழுமையாக வீழ்ச்சி அடைந்தது.
அது தவிர ரெண்டு கதா நாயகர்கள் என்றால் ரெண்டு பேருக்கும் இணையான சம்பளம் , உடைகள் , தாங்கும் வசதி , சண்டைக் காட்சிகள் , பாடல்கள் , துணை / இணை வசதிகள் உள்பட (இணையான ) முக்கிய நடிகைகள் என தயாரிப்பாளரும் இயக்குனரும் திக்கித் திணறி , தட்டுத் தடுமாறினர் .
அவ்வப்போது தமிழில் சத்யராஜ்-பிரபு, பிரபு-கார்த்திக் , விஜய்-சூர்யா என படங்கள் வந்திருந்தாலும் அது அதிக எண்ணிக்கையில் இல்லை என்றே சொல்லலாம்.
மலையாளத்திலும் இந்தியிலும் இன்றும் ரெண்டு மூன்று கதா நாயகர்கள் நடித்த நல்ல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி அடைகின்றன.
முக்கியமாக மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன . அதே போன்ற திரைப்படங்கள் தமிழில் தற்போது வெளி வராதது வேதனையே .
இரண்டு : கதா நாயகர்கள் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களின் எழுச்சி
(ஆண்டவன் ஒரு வழியை அடித்தால் மற்றொரு வழியை திறப்பான் என்பது போல , தவறாக தீர்ப்பு எழுதியவர்களே அதை திருத்தி எழுதுவது போல ) தமிழ் சினிமா ரெட்டை நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் குறைந்தவுடன் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்தன .
ரெண்டு நாயகர்கள் இல்லை என்றானவுடன் கதைக்கு தேவைப்படும் மற்றொரு முக்கிய பாத்திரத்தை தாங்களே ஏற்று நடித்தனர் .
ரெட்டை வேடங்களிலும் வித்தியாசமான முகத் தோற்றம் , பேச்சு , உடை என பெரும் புதுமைகள் நடந்தது . அதில் பெரும் பங்கு கமல் ஹாசனையே சேரும் . உதாரணமாக கல்யாண ராமன் அபூர்வ சகோதரர்கள் (அப்பு )
விரைவில் முன்னணி நடிகராக மாற ரெட்டை வேடங்கள் பெரிதும் துணை புரிந்தன . அதில் வெகு சீக்கிரத்தில் பலனும் அடைந்தவர் நடிகர் சரத் குமார் மட்டுமே .
தற்போது ரெட்டை வேடங்களையும் தாண்டி மூன்று , நான்கு என தொடங்கி பத்து வரை வந்து விட்டது . இந்த நிலை தொடர்ந்தாள் நம்ம " ச்சின்ன பையன் " சொன்னது போலாகி விடும் . ( நன்றி ச்சின்ன பையன் -
http://boochandi.blogspot.com/2008/04/2030.html )
திரைப்படங்களில் ( கதைக்கு தேவை இல்லாத பட்சத்தில் ) நாயகர்களின் ரெட்டை வேடங்கள் குறைந்து , (கதைக்கு தேவைப் படுமெனில் ) ரெண்டு கதா நாயகர்களின் திரைப்படங்கள் வருவது எப்போது ?
அன்புடன்
கே ஆர் பி
ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்களின் வீழ்ச்சியும்
கதா நாயகர்கள் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களின் எழுச்சியும்
( வ வா சங்கத்து போட்டிக்கான பதிவு இல்லை )
ஒன்று : ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்களின் வீழ்ச்சி
தமிழ்த் திரைப்படங்களின் ஜாம்பவான்களான எம் ஜி ஆர் , சிவாஜி ஆகிய இருவரின் கால கட்டங்களில் சிறப்பாக இருந்த ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் கமல் ரஜினி ஆகிய இருவரின் வரவுக்கு பின்னரும் நன்றாகத்தான் இருந்தது . இருவரும் இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்த பின்னரே வீழ்ச்சி அடையத் துவங்கியது .
காரணங்கள் பலவாக இருந்தாலும் எனக்கு தெரிந்த சில காரணங்களை பட்டியல் இடுகிறேன் .
ஆரம்பங்களில் கதா நாயகனின் முழு வாழ்க்கையையும் சித்தரித்த தமிழ் சினிமா பின்னாளில் கதாநாயகனின் வாழ்க்கையில் நடந்த குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் காட்டியது .
சமுதாயத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பானது சிதைந்து , தனிக்குடித்தனம் உருவான பொது அது நம் திரைப்படங்களிலும் பிரதி பலித்தது . கூட்டுக்குடும்ப கதையாக இருந்தால் குறைந்த பட்சம் மூன்று கதாநாயகர்கள் பத்து குணசித்திர நடிகர்களாவது இருப்பார்கள் . ஆனால் பின்னாளில் நடந்ததே வேறு கதையும் சுருங்கி திரையில் நடிப்பவர்களும் (எண்ணிக்கையில்) குறைந்தனர். ( கலையில் ஏற்படும் மாற்றம் கலாச்சாரத்திலும் , கலாச்சாரத்தில் ஏற்படும் மாற்றம் கலையிலும் பிரதி பலிப்பதும் இயல்பே. )
ரெண்டு கதா நாயகர்கள் என்றால் , ஒருவருக்கு ஒருவர் இணையான கதா நாயகர்களால் இருந்தால் மட்டுமே திரைப்படம் சிறப்பாக அமையும் . எம் ஜி ஆர் , சிவாஜி (அதிகம் இணைந்து நடிக்க வில்லை என்றாலும் கூட ) அவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் கூட மற்றவர்களுக்காக (ஜெமினி கணேசன் எஸ் எஸ் ராஜேந்திரன் பாலாஜி ஏ வி எம் ராஜன் மற்றும் பலர் ) சிறப்பான பாத்திரங்களை ஒதுக்கினர் . ஆனால் கமல் ரஜினி இருவரும் அதிக பட்சம் தங்கள் படங்களில் சேர்த்துக் கொண்டதே , சரத் பாபுவை மட்டும் தான் .
(சில படங்கள் : " பார்த்தால் பசி தீரும் " ஒன்று போதாதா?
/ பாச மலர் / படித்தால் மட்டும் போதுமா / அவள் அப்படித்தான் / நினைத்தாலே இனிக்கும் / இளமை ஊஞ்சலாடுகிறது / அவர்கள் / பதினாறு வயதினிலே , சின்ன தம்பி பெரிய தம்பி / அக்னி நட்சத்திரம் / குருதிப் புனல் / பிரண்ட்ஸ் )
பின்னர் திரையுலகினர் கண்டு பிடித்த " பஞ்ச் " எனப்படும் பேஜாரான வசனங்களால் ரெண்டு கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்கள் முழுமையாக வீழ்ச்சி அடைந்தது.
அது தவிர ரெண்டு கதா நாயகர்கள் என்றால் ரெண்டு பேருக்கும் இணையான சம்பளம் , உடைகள் , தாங்கும் வசதி , சண்டைக் காட்சிகள் , பாடல்கள் , துணை / இணை வசதிகள் உள்பட (இணையான ) முக்கிய நடிகைகள் என தயாரிப்பாளரும் இயக்குனரும் திக்கித் திணறி , தட்டுத் தடுமாறினர் .
அவ்வப்போது தமிழில் சத்யராஜ்-பிரபு, பிரபு-கார்த்திக் , விஜய்-சூர்யா என படங்கள் வந்திருந்தாலும் அது அதிக எண்ணிக்கையில் இல்லை என்றே சொல்லலாம்.
மலையாளத்திலும் இந்தியிலும் இன்றும் ரெண்டு மூன்று கதா நாயகர்கள் நடித்த நல்ல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி அடைகின்றன.
முக்கியமாக மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன . அதே போன்ற திரைப்படங்கள் தமிழில் தற்போது வெளி வராதது வேதனையே .
இரண்டு : கதா நாயகர்கள் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களின் எழுச்சி
(ஆண்டவன் ஒரு வழியை அடித்தால் மற்றொரு வழியை திறப்பான் என்பது போல , தவறாக தீர்ப்பு எழுதியவர்களே அதை திருத்தி எழுதுவது போல ) தமிழ் சினிமா ரெட்டை நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் குறைந்தவுடன் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்தன .
ரெண்டு நாயகர்கள் இல்லை என்றானவுடன் கதைக்கு தேவைப்படும் மற்றொரு முக்கிய பாத்திரத்தை தாங்களே ஏற்று நடித்தனர் .
ரெட்டை வேடங்களிலும் வித்தியாசமான முகத் தோற்றம் , பேச்சு , உடை என பெரும் புதுமைகள் நடந்தது . அதில் பெரும் பங்கு கமல் ஹாசனையே சேரும் . உதாரணமாக கல்யாண ராமன் அபூர்வ சகோதரர்கள் (அப்பு )
விரைவில் முன்னணி நடிகராக மாற ரெட்டை வேடங்கள் பெரிதும் துணை புரிந்தன . அதில் வெகு சீக்கிரத்தில் பலனும் அடைந்தவர் நடிகர் சரத் குமார் மட்டுமே .
தற்போது ரெட்டை வேடங்களையும் தாண்டி மூன்று , நான்கு என தொடங்கி பத்து வரை வந்து விட்டது . இந்த நிலை தொடர்ந்தாள் நம்ம " ச்சின்ன பையன் " சொன்னது போலாகி விடும் . ( நன்றி ச்சின்ன பையன் -
http://boochandi.blogspot.com/2008/04/2030.html )
திரைப்படங்களில் ( கதைக்கு தேவை இல்லாத பட்சத்தில் ) நாயகர்களின் ரெட்டை வேடங்கள் குறைந்து , (கதைக்கு தேவைப் படுமெனில் ) ரெண்டு கதா நாயகர்களின் திரைப்படங்கள் வருவது எப்போது ?
அன்புடன்
கே ஆர் பி
Subscribe to:
Posts (Atom)