Friday, April 25, 2008

ரெண்டாவது குரல்

வ வா சங்கத்து போட்டிக்கான பதிவு அல்ல


முதல் பதிவு : VISIT MILETUS: கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே இரண்டு முதல் முழு ஓய்வு !!!!!



நீங்க மலை மேல பேருந்தில் போகும்போது உங்க மனசு சொல்லும்
மலையிலிருந்து பார்க்க எவ்வளவு நல்லா இருக்கு ? கூடவே உங்களுக்கு மட்டும் கேட்கும் உங்களோட இரண்டாவது குரல் அது சொல்லும் பேருந்தோட கீழ விழுந்தா ஒரு எலும்பு மிஞ்சாது அது தாங்க அதே தாங்க . பேருந்துல இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட இரண்டாவது குரல் இது மாதிரி எதாவது சொல்லும். ஆனா யாரும் வெளிய சொல்ல மாட்டாங்க .

நம்ம பினாத்தல் சுரேஷ் சொல்லுவாரே
முதல் குரல் அனுபவச் சிதறல்கள் ன்னு சொல்லும்
ரெண்டாவது குரல் அடங்குடா மவனேன்னு சொல்லும் . அது தாங்க !!!!

(நன்றி சுரேஷ் : http://penathal.blogspot.com/)

எப்போதுமே நமக்கு மட்டுமே கேட்கும் நம்ம ரெண்டாவது குரல் ரொம்ப லொள்ளு புடிச்சதுங்கோ . அதுக்கு இடம் , பொருள் , ஏவல் , சூழல் , சூழ்நிலை , சமயம், சந்தர்ப்பம் , ஆள் தராதரம் எதுவும் தெரியாதுங்கோ .

ஆனா இன்னும் சில பேருக்கு அது ரொம்ப பொறுப்பா அறிவுரை ஆலோசனை எல்லாம் சொல்லும் .

முதல் குரலும் ரெண்டாவது குரலும் எதிரும் புதிருமா இருந்தா வாழ்க்கை ஜாலியா இருக்கும். ரெண்டு குரலும் நக்கலாவோ, ரெண்டு குரலும் சீரியஸா இருந்தாலும் ரொம்ப கஷ்டங்க !


அது நீங்க சோகமான இடத்துக்கு போனா அது நக்கல் நையாண்டியாக இருக்கும் . நீங்க சந்தோசமான இடத்துக்கு போனா அது இல்லாததை கற்பனை பண்ணி உங்களை சோகமா ஆக்கிரும்.

நீங்க ஆளுங்க நிறைய வந்து போற இடத்துக்கு போனா அப்பத்தான் உங்க ரெண்டாவது குரல் (அங்க வர்ற ஆளுங்களும் , அவங்க பேசறதும் ) ரொம்ப வேகமா இருக்கும் .

நீங்க உங்க ரெண்டாவது குரல் கிட்ட ரொம்ப கவனமாக இருக்கனுங்க
உங்களோட ரெண்டாவது குரல் மத்தவங்களுக்கும் கேட்க ஆரம்பிச்சா நீங்க பார்க்க வேண்டிய ஆளுங்களும் ரெண்டுங்க ஒன்னு மருத்துவர் ரெண்டு மந்திரிச்சு கயிறு கட்டுறவர்.

நேத்து கூட வெட்டிப்பயல் பின்னூட்டம் பார்த்துட்டு
முதல் குரல் : அப்பாடா ஒரு வழியா எழுதி முடிச்சுட்டோம்னு சொல்ல
ரெண்டாவது குரல் வழக்கம் போல “ சங்கத்து சிங்கங்கள் படிச்சுட்டு பின்னூட்டம் போடட்டுண்டா ” ஒரே ரகளைங்கோ

இன்னிக்கு காலையில் ரெண்டாவது குரல் என்ன சொல்லுச்சு தெரியுமா ?
முதல் குரல் : நேத்து போட்ட முதல் பதிவுக்கு ரெண்டு வரணும் என்ன தெரியுமா ? ஆட்டோவா இல்லை டாடா சுமொவா சொல்லு பார்க்கலாம் ?.
ரெண்டாவது குரல் : ரெண்டும் வரணும்

ரெண்டுல எது வந்தாலும் நாங்க அடுத்த ரெண்டுல குதிக்க சுலபமா இருக்கும் அதாப்பா ஒன்னு சினிமா ரெண்டு அரசியல் . ( நன்றி கிவியன் ) http://mounam.blogspot.com/2008/04/blog-post.html


அன்புடன்
கே ஆர் பி .


3 comments:

NewBee said...

ஸ்ஸ்ஸ்ப்பாஆஆ! எத்தன ரெண்டுங்க? இத எழுதணும்னு தோணுனப்ப ரெண்டாவது குரல் என்ன சொல்லுச்சு? :-)

நல்லா இருக்கு.

Anonymous said...

THANKS NewBee

ANBUDAN
KRP

Anonymous said...

zolpidem online can you buy ambien over counter - ambien dosage mayo clinic