குசேலன் – ரஜினி ஆசைப்பட்ட சினிமா
குசேலன் படப்பிடிப்பு துவக்கம்
ரஜினிக்காக கதையில் மாற்றம்
பல கோடிக்கு வியாபாரம்
கமல் நடிக்கிறார்
முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்
ஜுலையில் படம் வெளியாகும்
குசெலனைப் பற்றிய செய்திகள் வரத்துவங்கி விட்டது .
எல்லாம் சரி . குசேலன் - ரஜினி ஆசைப்பட்ட “ கதா பறையும் போல் ” படம் போல இருக்குமா ?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
" கதா பறையும் போல் " சினிமாவில் கதா ஆசிரியர் சீனிவாசன் ( மக்களுக்கு ) சொன்னது :-
பிரபலமான ஒரு நடிகர் (தனிப்பட்ட வாழ்க்கையில் ) தான் நடிகராக உதவிய , மற்றும் தன்னுடைய பால்யத்தில் தன்னை நன்கு கவனித்துக் கொண்ட ஒரு மனிதன் மேல் இருக்கும் அன்பு அல்லது நன்றியை பற்றியது . (இது ரஜினிக்கு முழுமையாக பொருந்தும் )
ஆனால் அந்த நடிகர் தனது நடிப்பு தொழிலில் அல்லது பொது வாழ்க்கையில் , அவர் எளிதில் கான அல்லது நெருங்க முடியாதவராக , ஒரு நடிகராகத்தான் இருக்கிறார் . (இது ரஜினிக்கு பொருந்துமா ? )
“ என்னைப்பற்றிய படம் ” என்று கண்டிப்பாக ரஜினி இதற்கு ஆசைபட்டிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
" கதா பறையும் போல் " சினிமாவில் கதா ஆசிரியர் சீனிவாசன் ( திரை உலகினருக்கு ) சொன்னது :-
ஊடகங்கள் அனைத்துமே மக்களுக்கானது .சினிமா என்பது ஒரு எளிய ஊடகமாக இருக்க வேண்டும் . மிக எளிமையான கதை , வசனம் , நடிப்பு , நடிகர்கள் , நடிகைகள் , குறைந்த முதலீடு . சீனிவாசனின் அனைத்து திரைப் படங்களிலும் உள்ள செய்தி இது தான் .
சீனிவாசனின் அனைத்து படங்களையும் பார்த்தவர்களுக்கு இது புரியும் .
ஒரு வேலை ரஜினி இதற்காகத்தான் ஆசைப்பட்டிருப்பார் என்றே நான் நம்புகிறேன்.
பணத்தில் புரள வேண்டிய கதையோ அல்லது திரைப்படமோ , கண்டிப்பாக இது இல்லை .
ஆனால் மீண்டும் மீண்டும் திரை உலகினர் சினிமா என்பது எளிய மக்களுக்கானது இல்லை என்றே நிரூபித்து வருகிறார்கள் .
ஒருவேளை ரஜினி ஆசைப்படாமல் இருந்திருந்தால் , ஒரு புதிய தயாரிப்பாளர் அல்லது அறிமுக இயக்குனர் இதை முயற்சி செய்திருப்பார் .
ரஜினி ஆசைப்பட்ட ஒரே காரணத்தினால் மீண்டும் " சினிமா என்ற ஊடகம் எளிய மக்களுக்கானது இல்லை " என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த கோடம்பாக்க வல்லுனர்கள் தங்கள் கைப்பக்குவத்தையும் திறமையையும் வேறு எதாவது ( நல்ல ) படங்களில் காட்டியிருக்கலாம்
இனிமேல்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரஜினி இனிமேலும் இது போன்ற எளிய திரைப் படங்களின் மீது ஆசைப்பட மாட்டார் என்றே நம்புவோமாக .
ரஜினி “ கதா பறையும் போல் “ படத்தை பலமுறை பார்த்ததாக பெட்டியில் தெரிவித்து இருந்த்தார் . குசேலன் வெளியாகிற தினத்தன்று " கதா பறையும் போல் " படத்தை மீண்டும் ஒரு பார்த்தால் நன்றாக இருக்கும்
இனிமேலும் இது போன்ற நல்ல எளிய சினிமாக்கள் , தமிழில் வர்ணம் பூசி , வேறு வடிவம் எடுக்குமானால் , அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ் சினிமாவை எளிய ஊடகமாக மாற்ற முடியாது .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
கே ஆர் பி
Wednesday, May 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Test Comment
Anbudan
KRP
/
KRP said...
Test Comment
Anbudan
KRP
May 7,
/
டெஸ்ட் சக்சஸ்
ஏம்பா சிவா ,
நீ ரஜினி ரசிகர் இல்லையே
( இதுக்கு நீ பின்னூட்டம் போடாமலே இருந்திருக்கலாம் )
அன்புடன்
கே ஆர் பி
ரஜினி பட ஹீரோயினுக்குதான் நான் ரசிகன் அந்த முறையில போட்ட பின்னூட்டம்பா அது
Post a Comment